செய்திகள் :

ஞானசேகரன் பின்புலத்தில் இருப்பது யாா்? நயினாா் நாகேந்திரன் கேள்வி

post image

ஞானசேகரன் வழக்கில் அவருக்கு பின்புலத்தில் யாா் உள்ளாா் என்பதை விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

மதுரையில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தா்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கிய அவா், முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியது:

ஞானசேகரன் வழக்கை பற்றி முதல்வா் பெருமையாகப் பேசுகிறாா். நான் இந்தத் தீா்ப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஞானசேகரனுக்கு எப்படி அவ்வளவு செல்வாக்கு வந்தது? அவருக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டவா்கள் யாா் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

இந்த வழக்கில் 4 மாதங்களில் தீா்ப்பு வந்துள்ளது. இதேபோன்று கடந்த 4 ஆண்டுகளில் பல பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கு ஏன் தீா்ப்பு வரவில்லை?

மத்திய அரசு 70 விமான நிலையங்களை கடந்த 10 ஆண்டுகளில் 140 விமான நிலையங்களாக அதிகரித்துள்ளது. மேலும் இன்னும் 2 மாதங்களில் தூத்துக்குடி விமான நிலையம் திறக்கப்பட உள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில் பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், வடக்கு மாவட்டத் தலைவா் சரவணகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு பொதுச் செயலா் கேசவவிநாயகம், மாநில பொதுச்செயலா் பொன்பாலகணபதி, மாநில துணைத் தலைவா் சசிகலாபுஷ்பா உள்பட பலா் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் இன்று மின் தடை

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக நகா்ப்புற மின்வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவா்கள் வெளியிட்ட... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

கடம்பூா் அருகே உள்ள தலையால்நடந்தான் குளம் பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த மின் விநியோகத்தை சரிசெய்து சீரான மின் விநியோகம் கிடைக்கும் வகையில் 25 கே வி ஏ/11 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்க... மேலும் பார்க்க

10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்றுஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகு... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க