செய்திகள் :

டாஸ்மாக் ஊழலில் முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின்தான்: அண்ணாமலை

post image

டாஸ்மாக் ஊழலில் முதல் குற்றவாளி முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என்பது மக்களுக்கு தெரியும் என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையில் சுமார் ரூ. 1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இந்த போராட்டத்துக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்ல முயன்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கு வெளியே கூடிய பாஜக தொண்டர்களும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இதையும் படிக்க : போராட்டத்துக்குச் சென்ற அண்ணாமலை கைது!

இந்த நிலையில், காவல்துறையினரின் கைது நடவடிக்கையை கண்டித்து அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“மாநில காவல்துறையை பயன்படுத்தி, பாஜகவின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைக் கைது செய்வதன் மூலம், ரூ. 1,000 கோடி மது ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டத்தைத் தடுத்ததாக திமுக அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது.

டாஸ்மாக் ஊழலில் முதல் குற்றவாளி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.

இந்த ஊழல் நிறைந்த திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எவ்வளவு நாள்கள் எங்களைக் கைது செய்வீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரயில்வே போர்வை உறையில் தமிழ்!

ரயில்வே பயணிகள் போர்வை உறைகளில் தமிழ் உள்பட 3 மொழிகளில் அச்சிட தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்பு ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டுவந்த நிலையில், ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மார்ச் 17 முத... மேலும் பார்க்க

காவல் துறையை இனி தூங்கவிடமாட்டேன்: அண்ணாமலை

இன்று இரவு முதல் காவல் துறையை தூங்கவிடமாட்டேன் என்று கைதாகி விடுதலை செய்யப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்குச் சென்ற மாநில தலைவர் ... மேலும் பார்க்க

பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்: மயக்கமடைந்த பெண்ணால் பரபரப்பு!

பாஜகவினர் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தில் பெண் ஒருவர் மயக்கம் அடைந்ததையடுத்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பா... மேலும் பார்க்க

மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்பாரா? - எஸ். ரகுபதி

பிரதமர் மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா? என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி ஊழலுக்கு ஆதாரம் உள்ளதா? என்றும் கேள்வி எழ... மேலும் பார்க்க

பாஜக - திமுக மறைமுக கூட்டணி: தவெக

பாஜக - திமுக புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வெ... மேலும் பார்க்க