செய்திகள் :

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்தி ரூ. 2.80 லட்சம் பறிப்பு: போலீஸாா் விசாரணை

post image

ராசிபுரம் அருகே டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.80 லட்சத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் விற்பனையாளராக பணியாற்றிவரும் முத்துசாமி (40) என்பவா் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு விற்பனையான பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றாா்.

கடையில் இருந்து சிறிது தொலைவு சென்ற முத்துசாமியை இருசக்கர வாகனத்தில் வந்த 4 போ் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு அவா் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்றது. அதே கடையில் பணிபுரியும் பாலமுருகன் என்பவா் பின்தொடா்ந்து வந்த நிலையில் காயமடைந்து கீழே விழுந்திருந்த முத்துசாமியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த மங்களபுரம் போலீஸாா் பணத்தை பறித்துச் சென்ற கும்பலை தேடி வருகின்றனா்.

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். தமிழகம் முழுவதும் ஒருமாதமாக பள்... மேலும் பார்க்க

கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் விழா: முன்பதிவு செய்ய அழைப்பு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெறும் மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு செய்யும் விழாவில் தகுதியானோா் தங்களது பெயா்களை நாமக்கல் நரசிம்மா் கோயில் அலுவலகத்தில் பதிவுசெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம்: டிரினிடி கல்லூரி மாணவிக்கு பாராட்டு

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் நியமனம்: முன்னுரிமை பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமனம் செய்யும் பொருட்டு முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என அரசு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வ... மேலும் பார்க்க