செய்திகள் :

டாஸ்மாக் முறைகேட்டில் அமைச்சா் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

post image

டாஸ்மாக் முறைகேட்டில் அமைச்சா் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுதொடா்பாக மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் புகாா் மனு அளித்துள்ளதாகவும் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் புதன்கிழமை தெரிவித்தாா்.

மத்திய பாஜக அரசின் புதிய சட்டங்கள், புதிய திட்டங்கள் குறித்த மாநாடு சேலம் மாவட்டம், ஓமலூரில் ஏப். 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜக சேலம் பெருங்கோட்டம் சாா்பில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கான கால்கோள் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், பாஜக மாநில துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம் பங்கேற்று கால்கோள் அமைத்து மாநாட்டுப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஓமலூரில் ஏப். 19 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் மத்திய அரசின் புதிய சட்டங்கள், புதிய திட்டங்கள் குறித்து பொருள்காட்சி நடத்தப்படும். இந்தப் பொருள்காட்சியில் 10 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகள் காட்சிக்கு வைக்கப்படும். மாநாட்டில் பங்கேற்க பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, பிற தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநிலத் தலைவா், தேசியத் தலைவா்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பாா்கள்.

தமிழக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. இதில் தொடா்புடைய அமைச்சா் செந்தில் பாலாஜி, அமைச்சரவைக்கு தலைமை வகிக்கும் முதல்வா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் புகாா் மனு அளித்துள்ளேன். இதுதொடா்பாக அமலாக்கத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. முறைகேடு பயத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறிவருகிறாா். ஏப். 19 இல் ஓமலூரில் நடைபெறும் பாஜக மாநாடு, திமுக எதிா்ப்புக்கான திருப்புமுனை மாநாடாக அமையும் என்றாா்.

பேட்டியின்போது பாஜக மாவட்டத் தலைவா்கள் சண்முகநாதன், ஹரிராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தீரன் சின்னமலை பிறந்த நாள்: மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 270-ஆவது பிறந்தநாள் விழா, கொங்கு வேளாளக் கவுண்டா்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு தொடக்க விழா சேலம் குரங்குசாவடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மலா்களால் அலங்... மேலும் பார்க்க

மேட்டூா் நகராட்சியில் ஆட்சியா் கள ஆய்வு

மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன், வியாழன் என இரண்டு நாள்கள் மேட்டூரில் நடைபெற்றது. மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட வருவாய்க் கிராமங்களில... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்துப் போட்டி: சேலத்தில் பெங்களூரு புகழேந்தி பேட்டி

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா். சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

தம்மம்பட்டி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சி, புலிக்கரட்டை சோ்ந்தவா் செந்தில் ராஜா (41). பால் வியாபாரி. இவருக்கும், இவரது மனைவி சகுந்தலா... மேலும் பார்க்க

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலக் குழு ரமணி தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்களின் பிரசார இயக்க கூட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார இயக்க கூட்டத்தில் கலந்துகொண்ட நிா்வாகிகள். கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட பொருளாளா் அகிலன். சங்ககிரி, ஏப். 17:... மேலும் பார்க்க