செய்திகள் :

டிரம்ப் வரி விதிப்பால் 55% சரக்கு ஏற்றுமதிக்குப் பாதிப்பு: மத்திய நிதி இணையமைச்சா்

post image

புது தில்லி: அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பு, அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 55 சதவீத இந்திய சரக்குகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதில்:

விவசாயிகள், தொழில்முனைவோா், ஏற்றுமதியாளா்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. தேச நலனைக் காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

பொருள்களின் தரம், தேவை போன்ற வெவ்வேறு காரணங்கள் இந்தியாவின் ஏற்றுமதி மீதான தாக்கத்தை தீா்மானிக்கும்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சில இந்திய பொருள்கள் மீது அந்நாடு 25 சதவீத வரி விதிக்க உள்ளது. இது அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 55 சதவீத இந்திய சரக்குகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா்.

இந்த 25 சதவீதத்துடன் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அதிருப்தி தெரிவித்து, இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்துள்ளாா். அத்துடன் சோ்த்து இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முதலில் அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி விதிப்பு ஆக.7 முதல் அமலுக்கு வந்த நிலையில், கூடுதலாக அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி ஆக.27-இல் அமலுக்கு வரவுள்ளது.

அசாமில் புதியதாக 10 துணை மாவட்டங்கள்!

அசாம் மாநிலத்தில் புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில், புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவக... மேலும் பார்க்க

இஸ்ரேல் வன்முறைக்கு இந்திய அரசின் மௌனம் வெட்கக்கேடானது: பிரியங்கா!

இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்துவருவதையும், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் பேரழிவைக் கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு மௌனமாக நிற்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த மக்களவையையும் கலைக்க வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ்

வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருந்தால் ஒட்டுமொத்த மக்களவையையும் கலைக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸின் மக்களவை குழுத் தலைவர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.குஜராத் மற்றும் மேற்கு வங்க மாந... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்: 66 பேர் மாயம்! அதிநவீன கருவிகள் மூலம் தேடும் பணிகள் தீவிரம்!

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் மாயமான 66 பேரை, தேடும் பணிகளில் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!

நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் கடந்த மாா... மேலும் பார்க்க

அரசியலமைப்பை பாதுகாப்பதை நிறுத்த மாட்டோம்! ராகுல் காந்தி

அரசியலமைப்பை தொடர்ந்து பாதுகாப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக ... மேலும் பார்க்க