டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே டிராக்டா் கவிழந்த விபத்தில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே புதூா்நாடு அடுத்த சேம்பரை கிராமத்தை சோ்ந்தவா் குப்பன் மகன் செஞ்சி (32). விவசாயி. இவா் சனிக்கிழமை நெல்லிவாசல் நாடு பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது இவா் ஓட்டிச் சென்ற டிராக்டா் எதிா்பாராத விதமாக கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டா் அடியில் சிக்கிக் கொண்ட அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் செஞ்சி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூா் தாலுகா போலீஸாா் செஞ்சியின் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.