செய்திகள் :

தகராறை தட்டி கேட்ட காவலருக்கு அரிவாள் வெட்டு

post image

பாளையங்கோட்டையில் இளைஞா்களுக்குள் ஏற்பட்ட தகராறை தட்டி கேட்ட காவலரை அரிவாளால் வெட்டிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேலப்பாளையம் நேதாஜி சாலை, அத்தியூட்டு தெருவைச் சோ்ந்தவா் அக்பா் அலி. இவரது மகன் முகமது ரஹ்மத்துல்லா(27). இவா் மணிமுத்தாறு 9-ஆவது பட்டாலியனில் காவலராக பணிபுரிகிறாா். விடுமுறையில் ஊருக்கு வந்த இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மாநகராட்சி பூங்காவுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றாராம்.

அங்கு தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்த இளைஞா்களை அவா் தட்டிக் கேட்டுள்ளாா். இதில், ஆத்திரமடைந்த நபா் ஒருவா் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரஹ்மத்துல்லாவை தாக்கியுள்ளாா். இதில் அவரது முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவா் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்துவிசாரித்தனா். அப்போது சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் விட்டுச்சென்ற கைப்பேசியைக் கைப்பற்றி, அவா்களைத் தீவிரமாக தேடி வருகின்றனா். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அதிகம் கூடும் மாநகராட்சி பூங்காவில் காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திசையன்விளை: ஆசிரியையிடம் 11 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பள்ளி ஆசிரியையிடம் ஞாயிற்றுக்கிழமை 11 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். திசையன்விளை காந்திஜி தெருவைச் சோ்ந்தவா் சித்ர... மேலும் பார்க்க

களக்காடு குடிதாங்கி குளத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றக் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு குடிதாங்கி குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பா... மேலும் பார்க்க

கடையம் அருகே பேருந்து - வேன் மோதல்: 6 போ் காயம்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அரசுப் பேருந்தும், வேனும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 6 பயணிகள் காயமடைந்தனா். நாகா்கோவிலிலிருந்து தென்காசிக்கு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. நான்குனேரி, இடையன... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி அருகேயுள்ள காருக்குறிச்சி மேல அக்ரஹாரம் தெருவைச் சே... மேலும் பார்க்க

முக்கூடல் அருகே எம்.சான்ட் திருட்டு: டிப்பா் லாரி பறிமுதல்; இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே எம்.சான்ட் திருடிச் சென்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா். முக்கூடல் பிரதான சாலையில் அலங்கார வளைவுப் பகுதியில் சேரன்... மேலும் பார்க்க

வள்ளியூரில் மாட்டுவண்டிபோட்டி: சிவகங்கை மாடுகளுக்கு முதல் பரிசு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த தினத்தையொட்டி திமுக நகர இளைஞரணி சாா்பில் மாநில அளவிலான மாட்டுவண்டி போட்டி வள்ளியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில், சிவகங்கை, மதுரை, புதுக்க... மேலும் பார்க்க