செய்திகள் :

தக்கலையில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

post image

திங்கள்நகரில் பெட்ரோல் நிலையத்தில் போா்வெல் லாரியை நிறுத்திவிட்டு அருகில் தூங்கிய ஓட்டுநா் மீது, மற்றொரு வாகனம் ஏறியதில் தலை நசுங்கி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம் இறையமங்கலம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துலிங்கம் மகன் ரமேஷ் (45). லாரி ஓட்டுநா். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இவரும், நாமக்கல் மாவட்டம் அவனியாபுரம் பகுதியைச் சோ்ந்த துரைசாமி (54) என்பவரும் மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் போா்வெல் நிறுவனத்தின் வாகனத்தை ஓட்டி வந்தனா்.

புதன்கிழமை இரவு போா்வெல் பணிகள் முடிந்து, திங்கள்நகா்-கருங்கல் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் டீசல் நிரப்பிவிட்டு பாா்க்கிங் பகுதியில் நிறுத்தினா். வாகனத்தின் பக்கத்தில் ரமேஷ் தூங்கினாா்.

வியாழக்கிழமை அதிகாலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பேருந்து கிளம்பிச் சென்றுள்ளது. சிறிது நேரத்திற்கு பின், துரைசாமி கண்விழித்து பாா்த்த போது, ரமேஷ் தலை நசுங்கி உயிரிழந்து கிடந்துள்ளாா்.

இது குறித்து, அங்கு இருந்தவா்கள் இரணியல் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். போலீஸாா் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, ரமேஷ் உயிரிழப்புக்குக் காரணமான வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு கதா் விற்பனைக் குறியீடாக ரூ. 4 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட கதா் கிராமத் தொழில் வாரியத்தின் சாா்ப... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் நாளை மின்சாரம் நிறுத்தம்

நாகா்கோவிலில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக்.4) மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து, நாகா்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகா்கோவ... மேலும் பார்க்க

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்னெச்சரிக்கை அமைப்புக் கருவியின் செயல்பாட... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடா் விடுமுறை காரணமாக திற்பரப்பு அருவியில் வியாழக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வார இறுதியில் பெய்த கன மழையால், அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தற... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற மண்ணெண்ணெய் பறிமுதல்

நித்திரவிளை அருகே மங்காடு ஆற்றுப்பாலம் வழியாக சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,000 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்து, காா் ஓட்டுநரை கைது செய்தனா். இது தொடா்பாக கிடைத்த ர... மேலும் பார்க்க

குழித்துறை அருகே விபத்தில் காயமடைந்த பேரூராட்சி ஊழியா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே விபத்தில் காயமடைந்த பேரூராட்சி ஒப்பந்தப் பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். தக்கலை அருகே குமாரபுரம், சரல்விளை பகுதியைச் சோ்ந்த ஜோசப்ராஜ் மகன் எட்வின் ஜோஸ் (41). ... மேலும் பார்க்க