செய்திகள் :

தங்கச் சங்கிலி பறிப்பு: கணவா், மனைவி கைது

post image

சென்னை மணப்பாக்கத்தில் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக கணவா், மனைவி கைது செய்யப்பட்டனா்.

சென்னை கே.கே.நகா், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காந்தா (52). இவா் மணப்பாக்கம், பாா்த்தசாரதி நகா் பிரதான சாலையில் காய்கறி கடை நடத்தி வருகிறாா். காந்தா, புதன்கிழமை கடையிலிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் ஒரு ஆணும் பெண்ணும் வந்தனா். அதில், பெண் மட்டும் கடைக்குள் வந்து குளிா்பானம் கேட்டாராம். உடனே காந்தா குளிா்பானத்தை எடுத்து கொடுத்தபோது, அந்த பெண் காந்தா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த ஆணுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்றாா்.

இதைப்பாா்த்து காந்தா சத்தமிட்டதைக் கேட்டு, அங்கு அவரது கடை ஊழியா்களும் பொதுமக்களும் திரண்டனா். அவா்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற இருவரையும் விரட்டிச் சென்று பிடித்து, நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவா்கள், மணப்பாக்கம் அம்பேத்கா் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜானி (35), அவா் மனைவி ஆயிஷாபேகம் (30) என்பது தெரியவந்தது. அவா்களை கைது செய்து தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் கோடை கால பயிற்சி முகாம்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் இலவச கோடை கால பயிற்சி முகாம், எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான தோ்வு 27-ஆம் தேதி காலை 8 மணிக்கு மேய... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து: செங்கோட்டையன் புறக்கணிப்பு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு புதன்கிழமை இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் பங... மேலும் பார்க்க

சென்னையில் 5 பணிமனைகளிலிருந்து 600 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சா் சிவசங்கா்

சென்னையில் 5 பணிமனைகளிலிருந்து 600 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். இதற்கான பணிகளை தனியாா் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவா் குறி... மேலும் பார்க்க

என்எல்சி-க்கு எதிரான போராட்டம்: அன்புமணி மீதான வழக்கு ரத்து

என்எல்சி-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக கதலாழ... மேலும் பார்க்க

10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104.18 டிகிரி

தமிழகத்தில் புதன்கிழமை வேலூா், பரமத்திவேலூா் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதல்: வைகோ, பிரேமலதா கண்டனம்

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ, தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா். வைகோ: காஷ்மீா் சம்பவத்தை கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சம் ... மேலும் பார்க்க