செய்திகள் :

தங்கத்தைப் போல் வரலாறு காணாத உச்சத்தை தொடும் வெள்ளி!

post image

புதுதில்லி: வலுவான தொழில்துறை தேவை, பலவீனமான டாலர் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், பாதுகாப்பான காரணங்கள் உள்ளிட்டவையால் வரும் மாதங்களில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1.5 லட்சமாக உயரக்கூடும் என்று மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிதிச் சேவைகளின் அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகளாவிய சந்தைகளில், வெள்ளை உலோகம் அவுன்ஸ் ஒன்றுக்கு 50 அமெரிக்க டாலர் அளவை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மற்ற முதலீடு பொறுத்த வரையில், வெள்ளி உலோகம் இந்த ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 37 சதவிகித வருமானத்தை அளித்துள்ளது.

முதலீடு மற்றும் தொழில்துறை தேவை, புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் முக்கிய பொருளாதாரங்களில் பணவியல் கொள்கை தளர்த்தலுக்கான எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக வெள்ளை உலோகம் பயனடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 88.5 ஆக வர்த்தகம் செய்யப்பட்டால், உள்நாட்டு சந்தையில் வெள்ளியின் விலை படிப்படியாக கிலோவுக்கு ரூ.1,35,000 ஆகவும், பிறகு 12 மாதங்களில் ரூ.1,50,000 ஆக நகரும்.

சர்வதேச சந்தைகளில், காமெக்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு $45 ஆகவும், பிறகு அடுத்த கட்டத்தில் அவுன்ஸ் ஒன்றுக்கு $50 ஆகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் கணித்துள்ளது.

ரஷ்யா சமீபத்தில் வெள்ளி கொள்முதல் செய்வதை வெளிப்படையாக அறிவித்த முதல் நாடாக மாறியது. அதே வேளையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 535 மில்லியன் அமெரிக்க டாலரையும் ஒதுக்கியுள்ளது.

செளதி அரேபியா மத்திய வங்கியும் இந்த ஆண்டு வெள்ளி உடன் இணைக்கப்பட்ட பரிமாற்ற வர்த்தக நிதிகளில் கிட்டத்தட்ட 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியா 3,000 டன்களுக்கும் அதிகமான வெள்ளியை இறக்குமதி செய்துள்ளது.

இதையும் படிக்க: ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.12 ஆக நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 3 காசுகள் குறைந்து ரூ.88.12 ஆக முடிவடைந்ததது.இந்தியா மீதான அமெரிக்க வரிகள் மற்றும் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் குறித்த கவ... மேலும் பார்க்க

நாட்டின் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் ரூ.40,000: இம்மாதம் வெளியாகிறது

விவோ டி4 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. முழுக்க முழுக்க கேமிங் பிரியர்களைக் கவரும் வகையிலான சிறப்பம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவ... மேலும் பார்க்க

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

மும்பை: இந்த மாத இறுதியில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் வெகுவாக எதிரொலித்ததும், உள்ளூர் வர்த்தகத்தில் ஐடி பங்குகள் மீட்சியடைந்ததைத் தொடர்ந்து... மேலும் பார்க்க

ரூ. 40,000க்கு கூகுள் பிக்சல் 9! ரூ.33,000 சலுகை பெறுவது எப்படி?

கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போனை ரூ. 40 ஆயிரத்துக்கு ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் பெறலாம். கடந்த ஆண்டு கூகுள் பிக்சல் 9 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை இல்லாத சலுகை விலையில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்க... மேலும் பார்க்க

பங்குச் சந்தை நிலவரம்: ஆட்டோமொபைல் பங்குகள் விலை உயர்வு!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,904.40 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் க... மேலும் பார்க்க

உற்பத்தித் துறையில் 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய 15 ண்டுகளில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க