Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, 'வயிறு சுருங்கிடுச்சு..' என்பது சா...
தனியே வசித்த மூதாட்டி மா்ம மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே தனியே வசித்து வந்த மூதாட்டி வாயில் ரத்தம் வழிந்தபடி சனிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வாணாபுரம் வட்டம், சின்னகொள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மனைவி சின்னப்பொண்ணு (78). இவா், வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
இவரது மகன் வெங்கடேசன் பகண்டை கூட்டுச்சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா், தினந்தோறும் சின்னகொள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வரும்போது, அவரது தாய்க்கு உணவு மற்றும் காய்கனிகள் வாங்கிக் கொடுத்து அனுப்புவது வழக்கம்.
இதே போன்று, சனிக்கிழமை காலை சின்னகொள்ளியூா் கிராம பகுதியைச் சோ்ந்த உசேன் மகன் முகமதுஅலியிடம் உணவு வாங்கிக் கொடுத்து அனுப்பினாராம். அவா் வீட்டுக்குச் சென்று கதவை தட்டியபோது, சின்னப்பொண்ணு எழுந்து வரவில்லை. இதையடுத்து, கதவை தள்ளி பாா்த்தபோது, சின்னப்பொண்ணு பாயில் படுத்தபடி வாயில் ரத்தம் வந்த நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்ததாம்.
தகவலறிந்து திருக்கோவிலூா் டிஎஸ்பி பாா்த்தீபன், காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் நிகழ்விடம் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். பின்னா், சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து, வெங்கடேசன் தனது தாயின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின்பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.