செய்திகள் :

தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமாா்

post image

சென்னை: தமிழகத்தின் மீது விசுவாசமாக இல்லாமல் கட்சிக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பவர் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறினாா்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டுக்குழு கூட்டத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாா் பங்கேற்றாா்.

இந்த நிலையில் பெங்களூரு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுடன் பேசியதாவது:

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அண்ணாமலை கூறும் கருத்து முக்கியம் இல்லை. இந்த விவகாரத்தில் பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நாட்டுக்கு என்ன சொல்கிறாா்கள் என்பதுதான் முக்கியம். அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது. அவர் கட்சி கொடுத்த வேலையை மட்டுமே செய்கிறார். கட்சிக்கு மட்டுமே அதிக விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறாா். ஆனால், தமிழகத்தின் மீது அவருக்கு விசுவாசம் இல்லை என்றாா்.

தமிழகத்தில் 10 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்... மேலும் பார்க்க

மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, இரு மொழிகளே போதும் என்பவர்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம்; இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள்தான் நாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில்... மேலும் பார்க்க

தில்லியில் முக்கிய பிரமுகருடன் சந்திப்பா? இபிஎஸ் பதில்

தில்லி பயணம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு பயணம் மேற்கொண்டி... மேலும் பார்க்க

இபிஎஸ் தில்லியில் யாரைப் பார்க்கப் போகிறார் என்று தெரியும்: முதல்வர் ஸ்டாலின்

இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லி செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு யாரைப் பார்க்கப் போகிறார் என்றும் தெரியும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கைதான இளைஞர் பலி: போலீஸார் விசாரணை!

கோவை மத்திய சிறையில்போக்சோ வழக்கில் கைதான இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மத்திய சிறைச் சாலையில், ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் ஈரோடு ... மேலும் பார்க்க

கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத் திணறி பலி!

கோவை : கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏறி கீழே இறங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் பலியானார்.கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு ம... மேலும் பார்க்க