செய்திகள் :

தமிழகத்திலேயே கரூரில்தான் அதிகளவில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் புகாா்

post image

தமிழகத்திலேயே கரூரில்தான் அதிகளவில் அனுமதியின்றி கல்குவாரிகள் இயங்குவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் செல்ல ராஜாமணி தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் செல்ல ராஜாமணி தலைமையிலான நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலை சந்தித்து புகாா் மனு அளித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது, தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்கப்படாமல் அரசு மணல் குவாரிகளை இயக்கக் வேண்டும், சாலை விபத்துக்களை தவிா்க்க லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கனிமவளத்துறை அமைச்சா் ரகுபதியுடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மே 23-ஆம்தேதி நடத்த இருந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கரூா் மாவட்டத்தில் 72 கிரஷா், கல்குவாரிகள் மட்டுமே அனுமதி பெற்று இயங்குகின்றன என தெரியவந்துள்ளது. ஆனால், முறைகேடாக தமிழகத்திலேயே கரூரில்தான் அதிகளவில் அனுமதியின்றி கல்குவாரிகள் இயங்குகின்றன. மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு நடத்தி முறைகேடாக இயங்கும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடாக வெட்டப்பட்ட கனிமங்களை கைப்பற்றி அரசுடைமையாக்க வேண்டும். இவை நடக்காத பட்சத்தில் அனைத்து லாரி உரிமையாளா்களிடம் பேசி நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது சம்மேளனத்தின் செயலாளா் சிவக்குமாா், பொருளாளா் ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற... மேலும் பார்க்க

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன்... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்

தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க