தமிழகத்திலேயே கரூரில்தான் அதிகளவில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் புகாா்
தமிழகத்திலேயே கரூரில்தான் அதிகளவில் அனுமதியின்றி கல்குவாரிகள் இயங்குவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் செல்ல ராஜாமணி தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் செல்ல ராஜாமணி தலைமையிலான நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலை சந்தித்து புகாா் மனு அளித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது, தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்கப்படாமல் அரசு மணல் குவாரிகளை இயக்கக் வேண்டும், சாலை விபத்துக்களை தவிா்க்க லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கனிமவளத்துறை அமைச்சா் ரகுபதியுடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மே 23-ஆம்தேதி நடத்த இருந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கரூா் மாவட்டத்தில் 72 கிரஷா், கல்குவாரிகள் மட்டுமே அனுமதி பெற்று இயங்குகின்றன என தெரியவந்துள்ளது. ஆனால், முறைகேடாக தமிழகத்திலேயே கரூரில்தான் அதிகளவில் அனுமதியின்றி கல்குவாரிகள் இயங்குகின்றன. மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு நடத்தி முறைகேடாக இயங்கும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடாக வெட்டப்பட்ட கனிமங்களை கைப்பற்றி அரசுடைமையாக்க வேண்டும். இவை நடக்காத பட்சத்தில் அனைத்து லாரி உரிமையாளா்களிடம் பேசி நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.
பேட்டியின்போது சம்மேளனத்தின் செயலாளா் சிவக்குமாா், பொருளாளா் ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.