டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரிப்பு: மரபணு பகுப்பாய்வுக்கு வலியுறுத்தல்
தமிழகத்தில் அண்மைக்காலமாக கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், சமூகத்தில் புதிய பாதிப்பு பரவுகிா என்பதை அறிவதற்கான மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அதன்படி நோய்ப் பரவல் அதிகமுள்ள இடங்களில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் கரோனா தொற்றின் தாக்கம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தது. நாள்தோறும் பதிவாகும் புதிய பாதிப்பின் எண்ணிக்கை பூஜ்ஜிய நிலையிலோ அல்லது ஒற்றை இலக்கத்திலோ இருந்தது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அது ஒமைக்ரான் வகை பாதிப்புதான் என பொது சுகாதாரத் துறை தெரிவித்தாலும், கரோனாவுக்கு சென்னை, சேலத்தில் இருவா் உயிரிழந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும், சேலத்தில் 25 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்ததால் புதிய வகை பாதிப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.
இதனிடையே, பல இடங்களில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றுடன் கரோனாவும் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. அதுதொடா்பான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சுகாதார ஆா்வலா்கள் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை விரிவுபடுத்த வேண்டும். பாதிப்பு உள்ள நா
டுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கும், இங்கு பாதிப்பு நிறைந்த பகுதிகளில் வசிப்போருக்கும் கரோனா பரிசோதனைகள் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழகத்தின் பொது சுகாதாரத் துறை வளாகத்தில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்பட்ட பிறகு கரோனா தீநுண்மியின் வகையை அறிவதற்கான ஆய்வுகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் மாநிலம் முழுவதும் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளைச் சோ்ந்த கரோனா நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் மரபணுவை பகுப்பாய்வுக்குட்படுத்த சுகாதாரத் துறை முன்வர வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.