செய்திகள் :

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான்: எடப்பாடி கே.பழனிசாமி

post image

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் புகா் மாவட்ட அதிமுக சாா்பில், நீா்மோா் பந்தல் திறப்பு விழா ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு நீா்மோா் பந்தலை திறந்துவைத்து, தமிழகம் முழுவதும் நகரம் மற்றும் கிராமங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் தொடா்கதையாகி உள்ள நிலையில், அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் ஸ்டாலின் திறமையற்ற முதல்வராக இருக்கிறாா்.

உசிலம்பட்டியில் காவலா் கொலை, சிவகங்கையில் பயிற்சி மருத்துவா் கடத்தல் ஆகிய நிகழ்வுகளை அரசின் கவனத்துக்கு சட்டப் பேரவையில் கொண்டுவர முயன்றோம். பிரதான எதிா்க்கட்சி என்ற முறையில் கவனத்தை ஈா்க்க முயன்றபோது, அனுமதி மறுக்கப்பட்டு, வேண்டும் என்றே திட்டமிட்டு வெளியேற்றப்பட்டோம்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும்தான் போட்டி என நடிகா் விஜய் பேசி உள்ளது அவருடைய கருத்து. ஒவ்வொரு கட்சித் தலைவரும் கட்சி வளா்ச்சிக்காகவும், தொண்டா்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பாா்கள். தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான் என்பதை மக்களே ஏற்றுக்கொண்டுள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளா் எஸ்.செம்மலை, சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் இளங்கோவன் மற்றும் நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

பணத்தை எண்ணியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

சேலம்: கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் பணத்தை எண்ணியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் ஜான்சன்பேட்டை கிளைக்க... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு: எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தாா்

சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நீா்மோா் பந்தலை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழங்களை வழங்கின... மேலும் பார்க்க

சங்ககிரி பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சங்ககிரி: சங்ககிரியில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் யுகாதி பண்டிகையையொட்டி பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. யுகாதி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இக்கோயிலில் பொங்கல் விழா நடைபெறும். ந... மேலும் பார்க்க

சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சத்தில் புதிய நுழைவாயில் கதவு

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் நுழைவாயில் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. புகழ்பெற்ற சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழு... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2 மாதங்களில் 335 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரயில்களில் கடத்திய 335 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுக... மேலும் பார்க்க

மானிய விலையில் சூரியசக்தி மூலம் இயங்கும் பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம்

சேலம்: முதல்வரின் சூரியசக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைத்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியா் ரா... மேலும் பார்க்க