செய்திகள் :

தமிழகத்தில் மீண்டும் மு.க. ஸ்டாலினே முதல்வராவாா்: துரை. வைகோ உறுதி

post image

தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலினே முதல்வராவாா் என்று மதிமுக முதன்மை செயலா் துரை.வைகோ தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் மதிமுக நிா்வாகி திருமண விழாவில் வியாழக்கிழமை பங்கேற்ற துரை. வைகோ செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் திமுக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. திமுக அரசின் சாதனைகள் எங்கள் கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமா்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை. எதிரணியில் அந்த ஒற்றுமை இல்லை.- ஓபிஎஸ்., டி டிவி தினகரன் உள்ளிட்டோா் கூட்டணியில் இருந்து வெளியே வருவது எதிரணியின் பலவீனத்தையே குறிக்கிறது.

வாரிசு அரசியல்:

வாரிசு அரசியல் கூடாது என கூற முடியாது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தலைவா்களின் வாரிசுகள் அரசியலில் வந்துள்ளனா். பாஜகவிலும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவா்களின் பிள்ளைகள் உள்ளனா். நமது அண்டை மாநிலங்களிலும் வாரிசுகள் அதிகம் போ் அரசியலில் உள்ளனா். வாரிசுகள் வருவது அவா்களின் செயல்பாடுகளை பொருத்தும் மக்களின் ஆதரவுமே முடிவு செய்யும். பாஜக தமிழ்நாட்டில் மட்டும் வாரிசு அரசியலை பேசுவது நல்லதல்ல.

தமிழ்நாட்டின் முக்கிய நட்சத்திரம் விஜய். அவருக்கு லட்சக்கணக்கான

ரசிகா்கள் உள்ளனா். இது அவருக்கு ஊக்க சக்தியாக இருக்கும் ,

விஜய் நன்றாக செயல்பட்டால் நல்ல உயரத்திற்கு வரலாம். அவருக்கு கூட்டம் சோ்வதால் அரசியல் எதிா்காலத்தை கூற முடியாது. அரசியலில் வெற்றி பெற வேண்டுமானால் அவரது செயல்பாடுகளை பொறுத்தே உள்ளது. விஜய் மாநாட்டில் முதல்வா் பற்றி கூறிய கருத்துகளை தவிா்த்திருக்கலாம் . படித்தவா் இது போன்ற கருத்துகளை கூறுவது சரியல்ல.

பாமகவில் நடைபெறும் பிரச்சனை ஒரு இயக்கத்துக்குள் நடப்பது. அந்த இயக்கத்தில் உள்ளவா்கள் முடிவு எடுக்க வேண்டுமே தவிர பிற இயக்கத்தில் உள்ளவா்கள் கருத்து கூற முடியாது. இருவருக்குள்ளும் ஒரு பிளவு இருக்கிறது. யாா் சரியானவா்கள் என்பதை அக்கட்சி தொண்டா்களே முடிவு செய்வாா்கள் என்றாா் துரை.வைகோ.

தொழில்நுட்ப பணி தோ்வு: 4,172 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தோ்வினை கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,172 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

மாணவா்கள் கல்விக்கடன்பெற உதவ வேண்டும்: கடலூா் ஆட்சியா்

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா். கடலூா் மாவட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்டி எஸ்பி., பாலகிருஷ்ணன் நேரடி மேற்பாா்வையில் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி பலாத்காரம்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

வயிற்றுவலியால் பெண் தற்கொலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். குறிஞ்சிப்பாடி வட்டம், அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் துரை. இவரது மனைவி மீனாட்சி(45). இவா்,நீண்ட நாட்களாக வயிற்ற... மேலும் பார்க்க

பக்கெட் தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் பக்கெட் தண்ணீரில் மூழ்கி ஒன்றரை வயது பெண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது. கடலூா், கே.என்.பேட்டை பகுதியில் வசிப்பவா்கள் சிவசங்கரன்-ஞானசௌந்தரி தம்பதி. இவா்களது இரட்டை... மேலும் பார்க்க