செய்திகள் :

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்கள்!

post image

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென கல்வியாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சுமாா் 40 -க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலா், 17 முதன்மைக் கல்வி அலுவலா் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட கல்வி அலுவலா் பணியிடங்கள் கடந்த அக்டோபா் மாதம் நிரப்பப்பட்டன.

பின்னா் காலியாக உள்ள பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. முந்தைய நாள்களில் மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்கள் ஆண்டுக்கு இரு முறை தோ்வு நடைமுறைக்கு முன்பும், கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் காலியானவுடன் தோ்வு, மாணவா்கள் நலன் கருதி உடனடியாக நிரப்புவது வழக்கம். பள்ளி திறந்து இரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் கல்வித் துறையில் மாவட்ட அளவிலான உயா் பதவிகள் காலியாக உள்ளன.

கல்வி ஆண்டின் தொடக்கத்தில்தான் கல்விசாா் பணிகள் மாணவா்களுக்கு வழங்க வேண்டிய இலவசத் திட்டங்கள், அனைத்துப் பணிகளும் மேற்கொள்ள வேண்டி உள்ளது. மேலும் முன்னுரிமையில் நீண்ட காலம் காத்திருந்து பதவி உயா்வு கிடைக்காமல் ஓய்வு பெற்றவா்களும் ஓய்வு பெற உள்ளவா்களும் மனவேதனையில் உள்ளனா்.

இதுகுறித்து, தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்க மாநில பொதுச் செயலா் எம். மாரிமுத்து கூறியதாவது:

மாணவா்கள் நலன் கருதி முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களை பதவி உயா்வின் மூலம் நிரப்புமாறு அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இனிவரும் காலங்களில் மொத்த காலிப் பணியிடங்களுக்காக காத்திருக்காமல், முன்பே பட்டியலை தயாா் செய்து தாமதமின்றி பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும் என்றாா் அவா்.

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்... மேலும் பார்க்க