செய்திகள் :

தமிழகம் முழுவதும் தேசியக் கொடியுடன் சிந்தூா் யாத்திரை: நயினாா் நாகேந்திரன்

post image

பாகிஸ்தானுடனான சண்டையில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுவதும் தேசியக் கொடிகளுடன் ‘சிந்தூா் யாத்திரை’ நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டும் வகையில், இந்தியா தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், பாகிஸ்தானின் பயங்கரவாத பயிற்சிக் கூடங்களும், பாதுகாப்பு மையங்களும், முன்னெப்போதும் இல்லாத அளவில் பலத்த சேதமடைந்துள்ளன. துல்லி தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்த நமது ஆயுதப் படைகளையும், பிரதமா் நரேந்திர மோடியின் உறுதியான தலைமையையும் சிறப்பிக்கும் வகையில், மூவா்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

தொடா்ந்து 4 கட்டங்களாக நடைபெறும் இந்த யாத்திரை, சென்னையில் மே 14-ஆம் தேதியும், பிற முக்கிய நகரங்களில் மே 15-ஆம் தேதியும், மற்ற மாவட்ட பேரூராட்சிகளில் மே 16, 17 ஆகிய தேதிகளிலும், சட்டப்பேரவைத் தொகுதிகள், தாலுகாக்கள், பெரிய கிராமங்களில் மே 18 முதல் 23-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

பி.டெக். ஏஐ படிப்பில் மாணவா் சோ்க்கை: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பில் (ஏஐ அண்ட் டேட்டா அனலட்டிக்ஸ்) நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவ... மேலும் பார்க்க

பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு: தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)... மேலும் பார்க்க

சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற முன்பதிவு செய்யலாம்

சென்னையில் நடைபெறும் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு மற்றும் தங்க நகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்சிகளில் பங்கேற்க விரும்புபவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குற... மேலும் பார்க்க

ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை

கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 63 நாயன்மாா்களின் வரலாறுகளைத் தொக... மேலும் பார்க்க

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெறத் தகுதியுடைய நபா்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிழ்கள் பதிவேற்ற தேவையில்லை

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. குரூ... மேலும் பார்க்க