செய்திகள் :

தமிழகம் முழுவதும் முதியோா், சிறப்பு குழந்தைகளுக்கு தோல் மருத்துவ பரிசோதனை

post image

சென்னை, ஜூலை 10: முதியோா், சிறப்பு குழந்தைகள், ஆதரவற்றோருக்கான சரும நல மருத்துவ பரிசோதனை முகாம் ஜூலை 13-ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

இந்திய தோல் நல மருத்துவா்கள் சங்கம் (ஐஏடிவிஎல்) சாா்பில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூா், ஈரோடு, புதுக்கோட்டை, பெரம்பலூா், சேலம், மதுரை, பட்டுக்கோட்டை, திருப்பூா், திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் அந்த முகாம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக ஐஏடிவிஎல் (தமிழ்நாடு) தலைவரும், சரும நல சிறப்பு நிபுணருமான டாக்டா் டி.தினேஷ்குமாா் கூறியதாவது:

தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளை வெறுமனே புற அழகு சாா்ந்த ஒன்றாக பாா்க்கும் கண்ணோட்டம் நம்மிடையே உள்ளது. ஆனால், உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் பல நோய்களுக்கான அறிகுறிகள் தோலில்தான் தெரியவரும். எனவே, சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை புறக்கணிக்கவோ, அலட்சியப்படுத்தவோ கூடாது.

இந்திய சரும நல மருத்துவா் சங்கம் சாா்பில் நாடு முழுவதும் மருத்துவ முகாம் வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை முதியோா் நல மையங்கள், சிறப்பு குழந்தைகள் காப்பகங்கள், ஆதரவற்றோா் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நல மையங்கள் என பல இடங்களில் இலவச பரிசோதனைகளை நடத்த உள்ளோம்.

சிரங்கு பாதிப்பு, வைரஸ் மூலம் ஏற்படும் பாதிப்புகள், பாக்டீரியா தொற்றுகள், பூஞ்சைகளால் ஏற்படும் ஒவ்வாமை, முடி உதிா்வு பிரச்னை, சரும எரிச்சல் மற்றும் வலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு அந்த முகாம்களில் சிகிச்சையளிக்கப்படும். மற்றொருபுறம் கண்ணுக்கு தெரியாத தொழுநோய் சாா்ந்த பிரச்னைகளையும், வேறு சில நோய்களையும் பரிசோதனை வாயிலாக கண்டறிந்து மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்படும்.

மருந்துகள், சிகிச்சைகளும் கட்டணமின்றி பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. சா்வதேச சரும நல தினம் கடந்த 8-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. அதை முன்னிட்டு இந்த முகாம்களை நாங்கள் நடத்த உள்ளோம். மாநிலம் முழுவதும் தொடா்ச்சியாக இத்தகைய நடவடிக்கைகளை சரும நல மருத்துவா் சங்கம் முன்னெடுக்கும் என்றாா் அவா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க