``பிடி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் மகா பெரியவர்'' - பட்டிமன்ற பேச்சாளர்...
தம்மம்பட்டி செயல் அலுவலா் பணியிட மாற்றம்
தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த எஸ்.சசிகலா கோவை மாவட்டம், கோட்டூா் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலராகப் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.
கோட்டூா் செயல் அலுவலராக இருந்த டி.எ.ஜெசியாபானுவை தம்மம்பட்டிக்கு பணியிடமாறுதல் செய்து பேரூராட்சிகளின் ஆணையா் கிரண் குராலா உத்தரவிட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் சசிகலா மாறுதலாகி சென்றாா்.
தம்மம்பட்டி புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்கும்வரை, பேரூராட்சி செயல் அலுவலா் பொறுப்பை செந்தாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் பிரகந்தநாயகி கூடுதலாக கவனிப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.