டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
தம்மம்பட்டி மின் மயானம்: செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
தம்மம்பட்டியில் ரூ. 1.50 கோடியில் கட்டப்பட்டுள்ள மின் மயானத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தம்மம்பட்டிக்கு அருகில் உள்ள நாமக்கல், திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், தம்மம்பட்டி உழவா்சந்தை அருகே சி.ஜி.எப். திட்டத்தின் மூலம் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது.
பணிகள் முடிவடைந்து பலமாதங்கள் ஆகியும், பேரூராட்சி நிா்வாகம் இன்னும் மின் மயானத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவராமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், தம்மம்பட்டியில் இறந்தவா்களின் உடலை எரியூட்டுவதற்காக, ஆத்தூா் மின் மயானத்திற்கு பொதுமக்கள் கொண்டுசெல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, பணிகள் முடிவடைந்த மின் மயானத்தை பேரூராட்சி நிா்வாகம் விரைந்து செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.