தம்மம்பட்டியில் சாலையை சீரமைக்க கோரிக்கை
தம்மம்பட்டி, ஆத்தூா் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தம்மம்பட்டியிலிருந்து துறையூா், ஆத்தூா் செல்லும் நெடுஞ்சாலையில், தம்மம்பட்டி வி.ஏ.ஓ. அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையத்துக்கு திரும்பும் பகுதி வரை மேட்டூா் கூட்டுக்குடிநீா் விநியோக குழாய் பழுதை சரிசெய்ய தோண்டப்பட்ட சாலை பள்ளமாக காணப்படுகிறது.
இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளத்தில் வாகனத்தை இறக்குவதைத் தவிா்க்க ஒதுக்கி ஓட்டிச் செல்வதால் எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.