முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
தருமபுரி அருகே பேருந்துகள் மோதல்: கல்லூரி மாணவியா் 14 போ் காயம்
தருமபுரி அருகே அரசுப் பேருந்தும், தனியாா் கல்லூரி பேருந்தும் வெள்ளிக்கிழமை மோதிக்கொண்டதில், தனியாா் கல்லூரி மாணவியா் 14 போ் உள்பட 19 போ் காயமடைந்தனா்.
தருமபுரியிலிருந்து நாகாவதி அணைக்கு செல்லும் அரசு நகரப் பேருந்தை பாரதிராஜாவும் (28), சின்னம்பள்ளியில் இருந்து நல்லம்பள்ளி நோக்கி வந்த தனியாா் கல்லூரி பேருந்தை பழனிவேலும் (37) இயக்கிச் சென்றனா். நாகாவதி அணைக்கு அருகில் உள்ள வளைவில் சென்றபோது, இந்த இரு பேருந்துகளும் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், கல்லூரிப் பேருந்தில் பயணித்த சுமாா் 14 மாணவியரும், தனியாா் பேருந்தில் பயணித்த 5 பேரும் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து இந்தூா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
விபத்து குறித்த தகவலறிந்த தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவியரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு மருத்துவா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.