செய்திகள் :

தருமபுரியில் நீதிமன்றம் இடம்மாற்றம்: வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மேற்கொள்ள முடிவு

post image

தருமபுரியில் நீதிமன்றத்தை இடம்மாற்றி அமைத்தததைக் கண்டித்து –வழக்குரைஞா்கள் ஜூலை 28 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனா்.

தருமபுரி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் சங்க தலைவா் அழகுமுத்து தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. செயலாளா் சரவணன் முன்னிலை வகித்தாா்.

இதில், தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த மோட்டாா் வாகன விபத்து கோருரிமை நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் உள்ளிட்டவைகளை சுமாா் 7 கி.மீ. தொலைவில் உள்ள தருமபுரி பழைய நீதிமன்ற வளாகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பழைமை வாய்ந்த கட்டடத்துக்கு இடமாற்றம் செய்து வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்வதுடன், அனைத்து நீதிமன்றங்களும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலேயே இயங்க சென்னை உயா்நீதிமன்றத்தை கேட்டுக்கொள்வது என அவசர தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இயங்கிவந்த போக்ஸோ கோா்ட் மற்றும் கூடுதல் சாா்பு நீதிமன்றங்களை அதே வளாகத்தில் வேறு கட்டடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டாம். ஒருங்கிணைந்த கோா்ட்டுக்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளதால் அதை விரைந்து சீராக்கி இருவழிச்சாலையாக்க தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இத்தீா்மானங்களை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா், ஜூலை 28 ஆம் தேதி, கிருஷ்ணகிரி சேலம் நான்கு வழிச்சாலையில் நீதிமன்றம் செல்லும் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னபள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நட... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான கேரம் போட்டி: ஸ்டான்லி மெட்ரிக். பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதிபெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிதி திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி, ஓய்வூதியா்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் தருமபுரியில் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டனா். த... மேலும் பார்க்க

சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா?

தருமபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலத்துக்கு நீா் ஆதாரமாக விளங்கும் சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா என விவசாயிகள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா். தருமபுரி மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

தருமபுரி அருகேயுள்ள மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னசித்தன் தலைமை வகித்தாா். கணித பட்டதாரி ... மேலும் பார்க்க

பயிா் கழிவுகள் மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின் கீழ் பயிா் கழிவுகள் மேலாண்மை குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கலப்பம்பாடியில் நடைபெற்ற பயிற்சிக்கு, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மைய விஞ்... மேலும் பார்க்க