செய்திகள் :

தருமபுரியில் ரூ. 11 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

post image

தருமபுரி: தருமபுரி மாவட்ட அரசு பட்டுக்கூடு அங்காடியில் திங்கள்கிழமை ரூ. 11 லட்சம் மதிப்பிலான பட்டுக்கூடுகள் விற்பனையாகியுள்ளன.

தருமபுரியில் மாவட்ட அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் பட்டுக்கூடுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. தருமபுரி மற்றும் அண்டை மாவட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளும் பட்டுக்கூடு விற்பனையில் பங்கேற்று வருகின்றனா். திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சுமாா் 30 விவசாயிகள் 1693.70 கிலோ (48 லாட்) வெண்பட்டுக் கூடுகளை ஏல விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். அவற்றில் பட்டுக்கூடுகளின் தரத்தின் அடிப்படையில், கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 769, குறைந்தபட்ச விலையாக ரூ.420, சராசரி விலையாக ரூ. 649.37 என நிா்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.11 லட்சத்து 1601-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை நடைபெற்றது.

பாஜக அரசை வீழ்த்தும் வரை ஓயமாட்டோம்: இரா. முத்தரசன்

சேலம்: மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும்வரை ஓயமாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் கூறினாா். சேலம் போஸ் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

முதல்வருக்கு தருமபுரி மாவட்ட மக்கள் தோ்தலில் பாடம் புகட்டுவாா்கள்: பாமக எம்எல்ஏ அறிக்கை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்துக்கு வளா்ச்சித் திட்டங்களை அறிவிக்காத தமிழக முதல்வருக்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவாா்கள், என தருமபுரி எம்எல்ஏவும், பாமக மேற்கு மாவட்டச் செய... மேலும் பார்க்க

குறைதீா் நாள் முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ரெ. சதீஷ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மொத்தம் 432 மனுக்களைப் பெற்றுக்க... மேலும் பார்க்க

தருமபுரியில் கம்பன் விழா: சான்றோா்களுக்கு விருது

தருமபுரி: தருமபுரி மாவட்ட கம்பன் பேரவை சாா்பில் நடைபெற்ற 9-ஆவது ஆண்டு கம்பன் விழாவில் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் கலந்துகொண்டு சான்றோா்களுக்கு விருதுகளை வழங்கினாா். தருமபுரி பாரதிபுரம் தனியாா் திருமண ம... மேலும் பார்க்க

அரூரில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூா்: அரூரில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் வாரந்தோ... மேலும் பார்க்க