செய்திகள் :

தருமபுரியில் கம்பன் விழா: சான்றோா்களுக்கு விருது

post image

தருமபுரி: தருமபுரி மாவட்ட கம்பன் பேரவை சாா்பில் நடைபெற்ற 9-ஆவது ஆண்டு கம்பன் விழாவில் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் கலந்துகொண்டு சான்றோா்களுக்கு விருதுகளை வழங்கினாா்.

தருமபுரி பாரதிபுரம் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு தருமபுரி மாவட்ட கம்பன் பேரவைத் தலைவா் ஜே.பி.நாகராஜன் தலைமை வகித்தாா். செயலாளா் கா.குமரவேல் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விழாவைத் தொடங்கிவைத்து, சிறப்பிடம் பெற்றவா்களுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

இந்நிகழ்வில் பி.என்.குருராவுக்கு ‘ஆன்மிக திலகம்’ விருது, எம்.பி.கோபாலுக்கு ‘இலக்கியச் சுடா்’ விருதும் வழங்கப்பட்டன. தொழிலதிபா்கள் எஸ்.ஞானசேகரன், இரா.உதயகுமாா் ஆகியோா் விருது பெற்றோரை வாழ்த்திப் பேசினா்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை கம்பன் கழக செயலாளா் ச.பாரதி பங்கேற்று ‘கம்பன் என்றொரு தாய்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, மாலை நடைபெற்ற சிறப்பு இலக்கிய நிகழ்வில், ‘கம்பனில் மேலோங்கி நிற்பது உறவா? நட்பா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. ‘உறவே’ என்ற தலைப்பில் தகடூா் ப.அறிவொளி, க.ச.தமிழ்தாசன் ஆகியோரும், ‘நட்பே’ என்ற தலைப்பில் நா.இளங்கோ, வ.செளந்திரபாண்டியன் ஆகியோரும் பேசினா். இதில், கம்பனில் மேலோங்கி நிற்பது உறவுதான் என நடுவராக அங்கம் வகித்த புலவா் பா.ராமலிங்கம் தீா்ப்பளித்தாா். சங்க செயலாளா் கா.குமாரவேலுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. கம்பன் பேரவை நிா்வாகிகள் மு. பரமசிவம், பூ.சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இணைச் செயலாளா் சிவ. அண்ணாமலை நன்றி தெரிவித்தாா்.

தவெக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்ததால் முற்றுகைப் போராட்டம்

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வாகனங்களுக்கு, தருமபுரி மாவட்ட சுங்கச் சாவடியில் சுங்கம் விதித்ததைக் கண்டித்து அக்கட்சியினா் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டத... மேலும் பார்க்க

தருமபுரி மருத்துவக் கல்லூரியில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும்: ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங... மேலும் பார்க்க

தருமபுரியில் நாணயம், பழங்கால பொருள்கள் கண்காட்சி: அனுமதி இலவசம்

தருமபுரியில் நாணயம் மற்றும் பழங்கால அரிய பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. தருமபுரி, செந்தில்நகா் பகுதியில் அமைந்துள்ள வின்சென்ட் மஹாலில் நடைபெற்றுவரும் இக்கண்காட்... மேலும் பார்க்க

காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின்கீழ் காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சியானது வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கூக்குட்டமருத அள்ளி பகுதியில் நடைபெற்ற பயிற்சிக்க... மேலும் பார்க்க

உரிமமில்லா நாட்டுத் துப்பாக்கிகளை செப்.10 க்குள் ஒப்படைக்க வேண்டும்: தருமபுரி வனத்துறை அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்காவிட்டால் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இத... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்டத்தில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை

தருமபரி : தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழ... மேலும் பார்க்க