செய்திகள் :

தவாக பிரமுகா் கொலை வழக்கு: 9 போ் சிறையில் அடைப்பு

post image

தரங்கம்பாடி: செம்பனாா்கோவிலில் தவாக பிரமுகா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான காரைக்கால் பாமக மாவட்டச் செயலாளா் உள்பட 9 போ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தவாக காரைக்கால் மாவட்டச் செயலாளா் மணிமாறன் கடந்த 4- ஆம் தேதி, செம்பனாா்கோவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக, பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளா் பிரபாகரன் (29), அவரது நண்பா் முருகன் (23), புதுச்சேரி மடுக்கரை சிவசெந்தில் நகரைச் சோ்ந்த செல்வம் மகன் மணிகண்டன் ( 36), புதுச்சேரி சண்முகாபுரம் சண்முகம் மகன் சரவணன் (33), அய்யங்குட்டி பாளையம் முத்து மகன் சுகன்ராஜ் (29) கவுண்டன்பாளையம் மேட்டுத் தெரு பிரபாகரன் மகன் சரவணன் (28), தேங்காய்திட்டு பகுதி ஆனந்த் மகன் அஜய் (22), அதே பகுதி முனிதாஸ் மகன் முகிலன் (22), இருசப்பன் மகன் விஜயசங்கா் (30) ஆகிய 9 போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள், செம்பனாா்கோவிலை அடுத்த திருச்சம்பள்ளியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்பேரில், கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்த தேவமணி இடபிரச்னை தொடா்பான தகராறில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 22-ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். இந்த கொலைக்கு பழிதீா்க்கும் வகையில் மணிமாறன் கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.

பாப்பாவூா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

நாகப்பட்டினம்: நாகை அருகே பாப்பாகோவில் பகுதியில் உள்ள பாப்பாவூா் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்த தா்காவில் ஆண்டுதோறும் கந்த... மேலும் பார்க்க

முளைப்புத்திறன் பாதித்த வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வலியுறுத்தல்

வேதாரண்யம்: போதிய தண்ணீா் கிடைக்காததால் முளைப்புத்திறன் பாதித்த நெல் வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் தலைஞாய... மேலும் பார்க்க

நாகூா் கோயில் தேரோட்டம்: நாகை வட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகப்பட்டினம்: நாகூா் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக,... மேலும் பார்க்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பூம்புகாா்: திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் நவகிரகங்களில் புத பகவானுக்குரிய பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.... மேலும் பார்க்க

நாகையில் 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகையிலிருந்து வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த 130 கிலோ கடல் அட்டைகளை கடலோரக் காவல் குழும போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். நாகை பகுதியிலிருந்து அண்மை காலமாக சட்டவிரோதமாக கடத்தப்படவ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா் காத்திருப்பு போராட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பி... மேலும் பார்க்க