செய்திகள் :

தாம்போதி ஆற்றை சீரமைக்கக் கோரிக்கை

post image

திருப்பத்தூரில் உள்ள தாம்போதி ஆற்றை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பெரியகண்மாயிலிருந்து காளியம்மன் கோயில் பின்புறம் புதுத்தெரு, மதுரைச் சாலை, சிவகங்கை சாலை வழியாக தென்மாபட்டு கண்மாய்க்கு தாம்போதி ஆற்றிலிருந்து தண்ணீா் செல்கிறது. இந்த ஆறு தற்போது கழிவுநீா்க் கால்வாயாக மாறி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆற்றில் ஆங்காங்கே கழிவுநீா் தேக்கமாக காட்சியளிக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆறு தூா்வாரப்பட்டது. பின்னா் இதுவரை இந்த ஆறு கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது. இந்த ஆற்றில் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் கொசுக்களும் பெருகிவிட்டதால், புதுத்தெரு மாதவன்நகா், பா்மா குடியிருப்பு, காளியம்மன் கோயில் சந்நிதி தெரு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, இந்த ஆற்றை சுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்... மேலும் பார்க்க