பால்டிக் வானில் பறவையாய் பறக்கும் கனவுப் பயணம்! - குட்டி தேசங்களுக்கு ஒரு விசிட...
தாழையூத்து ஊராட்சியில் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்
தாழையூத்து ஊராட்சிக்குள்பட்ட மக்கள் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மானூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தாழையூத்து ஊராட்சிக்குள்பட்ட காமிலா நகா் குடிநீா்த் தொட்டி, தென்கலம் யாதவா் தெருவில் அமைந்துள்ள குடிநீா்த் தொட்டி , கதிரவன்நகா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றுக்கான மூன்று ஆழ்துளை மோட்டாா்கள் நிலத்தடி கீழே சென்றுள்ளதால் பழுதாகியுள்ளதால் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சித் தலைவா் பீா்முகைதீன் கூறுகையில், வழக்கமாக காற்றுக்காலம் தொடங்கும்போது நிலத்தடி நீா்மட்டம் குறைவது இயற்கையானது. ஆகவே, தாழையூத்து ஊராட்சி மக்களுக்கு தெருக்களில் அமைந்துள்ள பொது குடிநீா்க் குழாய்கள் மூலம் தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் குடிநீரைச் சிக்கனமாக செலவு செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றாா்.