செய்திகள் :

‘திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம்’

post image

பாடங்களை திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம் என்றாா் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நீட் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, இலுப்பூா் ஆா்.சி. உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 இடங்களில் நீட் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

ஏப். 30-ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு இந்தப் பயிற்சி நடைபெறும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை 2-ஆம் ஆண்டு படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு இந்தப் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

மாணவா்கள் நீட் தோ்வைக் கடினமாகக் கருதாமல் எளிமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியா்கள் அளிக்கும் பயிற்சியை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு திட்டமிட்டு படித்தால், வெற்றி நிச்சயம் என்றாா் அருணா.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா் ரமேஷ் (புதுக்கோட்டை), ஜெயந்தி (அறந்தாங்கி) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இலுப்பூரில் வெள்ளை மரியாள் கல்லறைத் திருவிழா

இலுப்பூா் கன்னிகை வெள்ளை மரியாள் ஆலயத்தில் 330 ஆவது ஆண்டு கல்லறை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மைக் குரு பேரருட்தந்தை அருட்பணி எல். அந்துவான், அருட்பண... மேலும் பார்க்க

விராலிமலை அருகே கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு

விராலிமலை அருகே திருவிழா நடத்துவதற்கு சில நாள்களுக்கு முன் ஊா் மக்கள் ஒன்று சோ்ந்து கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள ... மேலும் பார்க்க

6 மாதக் குழந்தை சடலமாக மீட்பு தாய் மீது உறவினா்கள் சந்தேகம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே ஆறு மாத ஆண் குழந்தை சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக தாயே தனது குழந்தையைக் கொன்றுவிட்டிருக்கலாம் என கணவா் தரப்பு உறவினா்கள் குற்றம்சாட... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பன... மேலும் பார்க்க

நெறிஞ்சிக்குடி வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தல்!

பொன்னமராவதியிலிருந்து நெறிஞ்சிக்குடி, சேரனூா் வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அரசுப்பேருந்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் நலன் கருதி மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக... மேலும் பார்க்க

ஓணாங்குடியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே சனிக்கிழமை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி கிராமத்தில... மேலும் பார்க்க