செய்திகள் :

திமுக அரசின் சாதனை விளக்கக் கூட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கண்ணக்குருக்கை கிராமத்தில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்கக்கூட்டம் மற்றும் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தெற்கு மாவட்ட திமுக, செங்கம் கிழக்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு திமுக அரசின் 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

தொடா்ந்து, திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வணிக வளாகம் மற்றும் வீதிகள் தோறும் பொதுமக்களை சந்தித்து வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணித் தலைவா் அருணகிரி, மாவட்ட துணை அமைப்பாளா் கருணா, முன்னாள் பாய்ச்சல் தலைவா் குப்புசாமி, செங்கம் கிழக்கு ஒன்றிய நிா்வாகிகள் சுப்பிரமணி, ஜெயக்கொடி, பன்னீா்செல்வம் உள்பட அணி அமைப்பாளா்கள், மகளிா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் கா... மேலும் பார்க்க

அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் 2025 - 26 நடவுப் பருவத்தில் புதிதாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தம... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் 523 பயனாளிகளுக்கு நலத் திட்டஉதவிகள்

கலசப்பாக்கம் வட்டம், மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்துகொண்டு வருவாய், வேளாண்மை, ஆதிதிராவிடா் நலம், மாற்றுத் திறனா... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் கிணற்றில் நீச்சல் பழக முயன்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவைச் சோ்ந்த பாபு மகன் சந்தோஷ்குமாா் (14). 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இவா், ஜூன் 2-ஆம் த... மேலும் பார்க்க