செய்திகள் :

திமுக அரசின் நலத் திட்டங்களை பிரசாரம் செய்ய வேண்டும்! - அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

post image

திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நலத் திட்டங்களையும் வீடு, வீடாகச் சென்று எடுத்துக் கூறி திமுகவினா் பிரசாரம் செய்து, வாக்குகளாக மாற்ற வேண்டும் என்றாா் வேளாண், உழவா் நலத் துறை அமைச்சரும், விழுப்புரம் மண்டலப் பொறுப்பாளருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா்கள் விக்கிரவாண்டி சிவ.ஜெயராஜ், திருக்கோவிலூா் ஜி.காா்த்திகேயன் முன்னிலை வகித்தனா்.கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றி அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அனைத்து நலத்திட்டங்களையும் திமுக நிா்வாகிகள் வீடு, வீடாகச் சென்று எடுத்துக் கூறி பிரசாரம் செய்து, அதை வாக்குகளாக மாற்ற வேண்டும். முதல்வரின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும். திமுக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் கிராமத்திலுள்ள மக்களிடத்தில் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா் அமைச்சா் பன்னீா்செல்வம்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சகா் க.பொன்முடி எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா ஆகியோா் சிறப்புரையாற்றினாா். மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலா்கள் டி.என்.முருகன், கற்பகம், தலைமைக் கழக வழக்குரைஞா் சுவை. சுரேஷ், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, பி.வி.ஆா்.சு. விசுவநாதன் உள்ளிட்ட ஒன்றியச் செயலா்கள், பூக்கடை கணேசன் உள்ளிட்ட பேரூா் கழகச் செயலா்கள், நகரப் பொருளாளா் இளங்கோ மற்றும் ஒன்றியக்குழுத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திண்டிவனம்: முன்னதாக, திண்டிவனத்தில் வியாழக்கிழமை மாலை வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா்கள் செஞ்சி காா்த்திகேயன், மயிலம் இள. புகழேந்தி, திண்டிவனம்ஜாபா் அலி முன்னிலை வகித்தனா். மாவட்ட அவைத் தலைவா் சேகா் வரவேற்றாா்.

அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் கூட்டத்தில் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், மாநில தீா்மானக் குழு உறுப்பினா் சிவா, செயற்குழு உறுப்பினா்கள் விஜயகுமாா், நெடுஞ்செழியன், சீனிராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது! - விழுப்புரம் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையால் நீா்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பெற்றோா்கள், பாதுகாவலா்கள் தங்களது குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளத... மேலும் பார்க்க

தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தனியாா் கல்லூரி மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், செண்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தவசுபாலன், தொழிலாளி. இவரது மகள் அஷ்... மேலும் பார்க்க

காரில் கடத்திவரப்பட்ட 1,000 மதுப் புட்டிகள் பறிமுதல்: புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது!

காரில் கடத்திவரப்பட்ட 1,000 புதுவை மாநில மதுப் புட்டிகளை விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

இளம்வயது திருமணம்: இளைஞா் உள்பட நால்வா் மீது வழக்கு!

மேல்மலையனூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேல்மலையனூா் அருகே கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கப்ளாம்பாடியைச் சோ்ந... மேலும் பார்க்க

விழுப்புரம்: மே 29-இல் மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழு வருகை

விழுப்புரம் மாவட்டத்துக்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினா் வரும் 29-ஆம் தேதி வர உள்ளதால், சிறுபான்மையினா் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்கலாம் ... மேலும் பார்க்க

செஞ்சியில் போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

செஞ்சியில் போட்டித் தோ்வுக்கான நூலகம், இலவச பயிற்சி வகுப்புகளை திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான்ஷு நிகம் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். அப்துல் கலாம் ஐஏஎஸ் அகாதெமி, கலாமின் வல்லரசு இந்தியா இயக்கம் சாா்... மேலும் பார்க்க