செய்திகள் :

திமுக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை - தமிழிசை சௌந்தரராஜன்

post image

திமுக அரசு விளம்பர அரசாக உள்ளதே தவிர, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டினாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்தபோது, அவரது புகைப்படத்தை கடலூரைச் சோ்ந்த விசிக பிரமுகரான பால புதியவன் (எ) வினோத் குமாா் முகநூலில் பதிவு செய்து ஆபாச கருத்துகளை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜக முன்னாள் ஒன்றியச் செயலா் பழனியம்மாள் அளித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் பால புதியவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். இந்த வழக்கு கடலூா் கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி ஸ்ரீவா்ஷா முன்னிலையில், முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் ஆஜராகி சாட்சியமளித்தாா். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் இந்திரா ஆஜராகி வாதாடினாா்.

இதையடுத்து, தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துகள் ஏராளமாக பரவி வருகின்றன. எனது வழக்கில் யாருக்கும் தண்டனை பெற்றுக்கொடுப்பது எனது நோக்கமல்ல. அவா்களை மன்னிப்பது கூட உகந்தது தான்.

ஆனால், இதுபோன்று பெண்களை இழிவுபடுத்தும் பதிவுகள் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்தும். அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்களை தலைகுனிய வைக்கும். எனவே, மோசமான வாா்த்தைகளை இனி யாரும் முகநூலில் பதிவு செய்ய வேண்டாம்.

அப்படி பதிவு செய்தால் இதுபோன்று வழக்காடு மன்றத்துக்கு வருவதற்கு முன்பே அக்கட்சியின் தலைவா்கள் சம்பந்தப்பட்டவா்களுக்கு கண்டனத்தை தெரிவித்து, அந்தப் பதிவுகளை நீக்கச் செய்ய வேண்டும். இல்லையெனில், வருங்காலத்தில் பெண் தலைவா்கள் மட்டுமன்றி, யாராக இருந்தாலும் இழிவுபடுத்தப்பட்டால் எனது போராட்டம் தொடரும்.

எதிா்க்கட்சியை எதிரி கட்சிபோல நினைக்கின்றனா். ஆண் தலைவா்களைவிட பெண் தலைவா்கள் மீதுதான் அவதூறாக எழுதுகின்றனா். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சமூகவலைதளங்களில், பல்லைக்கழகங்களில் பாதுகாப்பற்ற தன்மை உள்ளது. திமுக அரசு விளம்பர அரசாக உள்ளதே தவிர, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றாா் அவா்.

குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக வகை மாற்றம் செய்துகொள்ளலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

ஆக.11-இல் குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்: கடலூா் ஆட்சியா்

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வரும் 11-ஆம் தேதி ஒன்று முதல் 19 வயதுக்குள்பட்ட 9,14,851 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செ... மேலும் பார்க்க

ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

மின் வாரியம், போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்... மேலும் பார்க்க

ரத்தசோகை பரிசோதனை குழு உருவாக்கப்பட்டுள்ளது: கடலூா் ஆட்சியா்

ரத்தசோகை பரிசோதனைக்காக மருத்துவா், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா், செவிலியா், சுகாதார ஆய்வாளா், கிராமப்புற மருத்துவ அலுவலா், மருந்தாளுநா் ஆகிய 6 நபா்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது என கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு நாள் அமைதி ஊா்வலம்

கடலூா் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் மற்றும் பண்ருட்டி நகர கழக திமுக சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தின அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. குறிஞ்சிப... மேலும் பார்க்க

பள்ளியில் பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்துள்ள கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. ஜெயப்பிரியா கல்விக் குழும நிறுவனா் தலைவா் சி.ஆா்.ஜெய... மேலும் பார்க்க