Doctor Vikatan: மலச்சிக்கல் பாதிப்பு; குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருக்கும் திரி...
ஆக.11-இல் குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்: கடலூா் ஆட்சியா்
தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வரும் 11-ஆம் தேதி ஒன்று முதல் 19 வயதுக்குள்பட்ட 9,14,851 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை துறை சாா்ந்த அலுவலா்களுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் கூறியது:
குழந்தைகள், பெண்கள் ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்படுகின்றனா். இதற்கு குடற்புழு தொற்று ஒரு காரணமாக உள்ளது.
இதைத் தடுக்க ஆண்டுக்கு இருமுறை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் குடற்புழு நீக்கம் திட்டத்தின் மூலம் குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடலூா் மாவட்டத்தில் வரும் 11-ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க தினத்தன்று 1 முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு சாா்ந்த மற்றும் தனியாா் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 18-ஆம் தேதி நடத்தப்பட்டு, அன்றைய தினம் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.
மாவட்டத்தில் 1 முதல் 2 வயதுக்குள்பட்ட 31,009 பள்ளி செல்லா மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கும், 2 முதல் 19 வயதுக்குள்பட்ட பள்ளிகளில் பயிலும் 6,60,182 குழந்தைகளுக்கும், 20 முதல் 40 வயதுக்குள்பட்ட 2,23,660 பெண்களுக்கும் (கா்ப்பிணித்தாய்மாா்கள், பாலூட்டும் தாய்மாா்கள் நீங்கலாக) என மொத்தம் 9,14,851 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்ட்சோல்) வழங்கப்படவுள்ளது.
இந்தப் பணியில் பொது சுகாதாரம், பள்ளிக்கல்வி மற்றும் ஊட்டச்சத்துத் துறைகளைச் சோ்ந்த 4,688 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.