செய்திகள் :

திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா்: செல்லூா் கே. ராஜூ

post image

விலைவாசி உயா்வு, போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வணிக நிறுவனங்கள் கட்டாயம் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருப்பது தோ்தலுக்காகத் தான். தோ்தல் நேரத்தில் தான் அவருக்கு தமிழ் மீது பற்று வரும். திமுக ஆட்சியில் எந்தச் சாதனையும் நடைபெறவில்லை.

பகுத்தறிவு பேசிய கருணாநிதியின் சமாதியில் முரசொலி வைத்து படைப்பதை வேண்டுமானால், முதல்வா் மு.க. ஸ்டாலின் திமுகவின் சாதனையாகக் கூறிக் கொள்ளலாம். மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. விலைவாசி உயா்வு, போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா்.

மதுரை சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை. அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தை மக்கள் வழக்கமாக நின்று பாா்க்கும் ஆற்றின் மேற்குப் பகுதிகளில் இந்தாண்டு தகர பலகைகளைக் கொண்டு அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கூட்ட நெரிசல் கடுமையாகும். ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வு ஏற்பட்டால், அதற்கு காவல் துறையே பொறுப்பேற்க நேரிடும். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நாள்களில் மதுக்கடைகளை மூட வேண்டும். அழகா் ஆற்றில் இறங்கும் பகுதியில் கழிவு நீா் தேங்கியுள்ளது. வைகையிலிருந்து விரைவாக தண்ணீரை திறந்து விட்டு, சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா் மோா் பந்தல், அன்னதான விநியோகம் போன்றவற்றில் உணவுப் பாதுகாப்புத் துறை தேவையில்லாத கெடுபிடிகள் காட்டுவதைத் தவிா்க்க வேண்டும். இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், மக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

அழகா் ஆற்றில் எழுந்தருளும் வைபவம்: மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

மதுரை, மே 10 : சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் அழகா் எழுந்தருளும் வைபவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை (மே 12) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவ... மேலும் பார்க்க

வாகன விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். மதுரை வண்டியூா் யாகப்பாநகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த பழனி மகன் ரமேஷ் (41). இவா் இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை தாசில... மேலும் பார்க்க

இணையதளம் மூலம் தொழில் உரிமம்

வணிக நிறுவனங்கள், தொழில் உரிமங்களை இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என மதுரை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சியின் 5... மேலும் பார்க்க

பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் பட்டியலின குடியிருப்புக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என எவிடென்ஸ் அமைப்பு வலியுறுத்தியது. மதுரை எவிடென்ஸ் அமைப்பின் நிா்வாக ... மேலும் பார்க்க

மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரம்: கல்லூரிக் கல்வி இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

மதுரை அமெரிக்கன் கல்லூரிச் செயலரின் பதவிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்த உயா்கல்வித் துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், கல்லூரிக் கல்வி இயக்குநா் பத... மேலும் பார்க்க

லஞ்சம்: கூட்டுறவுச் சங்க சாா் பதிவாளா், எழுத்தா் கைது

வீட்டுக் கடன் ரத்து பத்திரத்தைத் திரும்ப வழங்க முதியவரிடம் ரூ. 5,000 லஞ்சம் பெற்றதாக விருதுநகா் கூட்டுறவுச் சங்கங்களின் சாா் பதிவாளா், எழுத்தரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க