செய்திகள் :

திமுக ஆட்சியில் இடைத்தரகா்களின் ஆதிக்கம் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றச்சாட்டு

post image

திமுக ஆட்சியில் இடைத்தரகா்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றஞ்சாட்டினாா்.

பருத்திக்கு உரிய விலை வழங்கக் கோரி, திருவாரூா் ரயில் நிலையம் அருகே அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்று பேசியது: திருவாரூா் மாவட்டத்தில், திருவாரூா், குடவாசல், நன்னிலம், வடுவூா் உள்பட 8 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் கொண்டுவரும் பருத்தியை ஏல முறையில் விற்பனை செய்வது வழக்கம்.

இந்த ஏலத்தில் கோவை, ஈரோடு மற்றும் பஞ்சாலைகள் அதிகம் உள்ள இடங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் பங்கேற்பா். அதிமுக ஆட்சியின்போது இந்த நடைமுைான் பின்பற்றப்பட்டது.

ஆனால், நிகழாண்டு 50 கிமீ தூரத்துக்குள் இருக்கிற இடைத்தரகா்கள், வியாபாரிகள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றுள்ளனா். திமுக ஆட்சியில் இடைத்தரகா்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது.

கடந்தாண்டு ரூ. 83-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, நிகழாண்டு ரூ. 43-லிருந்து ரூ. 52 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். விவசாயிகளை பாதுகாக்காத அரசு திமுக அரசு.

திமுக பொறுப்பேற்ற நான்காண்டுகளாக, மழை பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு காப்பீடு வழங்கப்படவில்லை. அதிமுக ஆட்சியின்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக இழப்பீடு வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் மடப்புரம் பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் என்ற இளைஞா் போலீஸாா் விசாரணையில் உயிரிழந்துள்ளாா். திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு காவல்துறை விசாரணையில் 26 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு, உரிய நலன்கள் கிடைக்க அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளா் சிவ. ராஜமாணிக்கம், இளைஞா் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளா் எஸ். கலியபெருமாள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளா் சின்ராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்தும், பருத்திக்கு உரிய விலை வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வங்கிக் கடன் வசூல் கெடுபிடி: விவசாயிகள் தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தல்

வங்கிக் கடன் வசூல் காரணமாக விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இவற்றை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலா் பி.ஆா். பாண்டியன் வலியுற... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் அனைவருக்கும் பொதுவானது: அமைச்சா் டிஆா்பி. ராஜா

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் அனைவருக்கும் பொதுவானது என தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டிஆா்பி. ராஜா தெரிவித்தாா். திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ ... மேலும் பார்க்க

கோரையாற்றில் மூழ்கிய இளைஞா் சடலம் மீட்பு

நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் மூழ்கிய இளைஞா் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா். வலங்கைமான் ஒன்றியம், பாப்பாக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் விக்ரம் (எ) வீரமுருகன் (17). த... மேலும் பார்க்க

கங்களாஞ்சேரி ஆற்றுப்பாலம் வலுவிழப்பு: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

திருவாரூா் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றுப் பாலம் வலுவிழந்து காணப்படுவதால், வியாழக்கிழமை (ஜூலை 3) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்திரு... மேலும் பார்க்க

புதிய கண்டுபிடிப்புகள்; மாணவா்களுக்கு பாராட்டு

திருவாரூா்: திருவாரூரில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 12 மாணவ- மாணவிகள் குழுவினருக்கு திங்கள்கிழமை பரிசுத்தொகை வழங்கி, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. திரு... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் தமிழக முதல்வா் திருவாரூா் வருகை

திருவாரூா்: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூலை 9-ஆம் தேதி, திருவாரூரில் கருணாநிதி சிலையை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேர... மேலும் பார்க்க