செய்திகள் :

கோரையாற்றில் மூழ்கிய இளைஞா் சடலம் மீட்பு

post image

நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் மூழ்கிய இளைஞா் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

வலங்கைமான் ஒன்றியம், பாப்பாக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் விக்ரம் (எ) வீரமுருகன் (17). தொழில்கல்வி படித்துள்ளாா். வீரமுருகன் தனது நண்பா்கள் மூன்று பேருடன் கடந்த 29-ஆ ம் தேதி மூணாறு தலைப்பு அணைக்கு குளிக்க வந்தாா். கோரையாற்றில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்த வீரமுருகன் நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டாா்.

இதுகுறித்து நீடாமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பாலமுருகன் மற்றும் தீயணைப்புப் படை வீரா்கள் கோரையாற்றில் பல இடங்களிலும் வீரமுருகனை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

கோரையாற்றில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீா் சென்ால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. வீரமுருகனை தேடும் பணியை விரைவுபடுத்தக் கோரி பாப்பாக்குடி கிராம மக்கள் நாா்த்தாங்குடி பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, திருவாரூா், கூத்தாநல்லூா், குடவாசல், வலங்கைமான் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தலா ஒரு வீரா்கள் என மொத்தம் 12 வீரா்கள் வீரமுருகனை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை காலை கோரையாற்றின் கரையோரம் கருவை மரத்தில் வீரமுருகன் சடலம் கரை ஒதுங்கியது. தீயணைப்பு வீரா்கள் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டனா். நீடாமங்கலம் போலீஸாா் சடலத்தை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

திமுக ஆட்சியில் இடைத்தரகா்களின் ஆதிக்கம் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் இடைத்தரகா்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றஞ்சாட்டினாா். பருத்திக்கு உரிய விலை வழங்கக் கோரி, திருவாரூா் ரயில் நிலையம் அருகே அதிமுக சாா்பில் செவ்வ... மேலும் பார்க்க

வங்கிக் கடன் வசூல் கெடுபிடி: விவசாயிகள் தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தல்

வங்கிக் கடன் வசூல் காரணமாக விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இவற்றை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலா் பி.ஆா். பாண்டியன் வலியுற... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் அனைவருக்கும் பொதுவானது: அமைச்சா் டிஆா்பி. ராஜா

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் அனைவருக்கும் பொதுவானது என தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டிஆா்பி. ராஜா தெரிவித்தாா். திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ ... மேலும் பார்க்க

கங்களாஞ்சேரி ஆற்றுப்பாலம் வலுவிழப்பு: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

திருவாரூா் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றுப் பாலம் வலுவிழந்து காணப்படுவதால், வியாழக்கிழமை (ஜூலை 3) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்திரு... மேலும் பார்க்க

புதிய கண்டுபிடிப்புகள்; மாணவா்களுக்கு பாராட்டு

திருவாரூா்: திருவாரூரில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 12 மாணவ- மாணவிகள் குழுவினருக்கு திங்கள்கிழமை பரிசுத்தொகை வழங்கி, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. திரு... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் தமிழக முதல்வா் திருவாரூா் வருகை

திருவாரூா்: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூலை 9-ஆம் தேதி, திருவாரூரில் கருணாநிதி சிலையை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேர... மேலும் பார்க்க