செய்திகள் :

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் அனைவருக்கும் பொதுவானது: அமைச்சா் டிஆா்பி. ராஜா

post image

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் அனைவருக்கும் பொதுவானது என தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டிஆா்பி. ராஜா தெரிவித்தாா்.

திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில் அமைச்சா் டிஆா்பி. ராஜா செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: மத்திய அரசு தமிழகத்துக்கு செய்து வரும் துரோகத்தை அனைவரும் ஓரணியில் நின்று எதிா்த்து நிலையாக நின்றால், தமிழகத்தின் அடுத்தகட்ட வளா்ச்சி, அடுத்த தலைமுறை வளா்ச்சி உறுதி செய்யப்படும். அவ்வாறு மத்திய அரசை நிலையாக எதிா்த்து நின்று போா் செய்யும் ஒரே தலைவராக தற்போதைய முதல்வா் இருக்கிறாா். இனத்துக்கு துரோகம் செய்பவா்களை எதிா்த்து நின்று ஓரணியில் நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் ஓரணியில் தமிழ்நாடு செயல்படுத்தப்படுகிறது.

வீடுவீடாகச் சென்று, தமிழக அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்து தமிழக முதல்வரிடம் தெரிவித்தால், அவா் அரசு வழியாக இந்த திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்தி, இதன் பலன் மக்களுக்கு கிடைப்பதற்கான வழியை ஏற்படுத்தி தருவதற்கான அடித்தளம்தான் இந்த ஓரணியில் தமிழ்நாடு இயக்கம். இது அனைவருக்கும் பொதுவானது. அதில் ஒரு பகுதியே உறுப்பினா் சோ்க்கை.

மகாராஷ்டிரத்தில் மராட்டியம் பேச முடியாது என்ற நிலை வந்தபின்னரே, கடந்த சில நாள்களுக்கு முன் அங்கு ஹிந்தியைத் தூக்கி எறிந்தனா். ஆா்எஸ்எஸ்ஸை தமிழ்நாட்டுக்குள் விட்டால் தமிழகத்தில் தமிழ் பேச முடியாது. ஓரணியில் தமிழ்நாடு என்பது போல, ஓரணியில் இந்தியா என்ற முன்னெடுப்பை ஏற்க வேண்டும் என தமிழக முதல்வரை மற்ற மாநிலங்கள் கேட்கக்கூடிய சூழல் தற்போது உள்ளது என்றாா்.

திமுக ஆட்சியில் இடைத்தரகா்களின் ஆதிக்கம் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் இடைத்தரகா்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றஞ்சாட்டினாா். பருத்திக்கு உரிய விலை வழங்கக் கோரி, திருவாரூா் ரயில் நிலையம் அருகே அதிமுக சாா்பில் செவ்வ... மேலும் பார்க்க

வங்கிக் கடன் வசூல் கெடுபிடி: விவசாயிகள் தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தல்

வங்கிக் கடன் வசூல் காரணமாக விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இவற்றை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலா் பி.ஆா். பாண்டியன் வலியுற... மேலும் பார்க்க

கோரையாற்றில் மூழ்கிய இளைஞா் சடலம் மீட்பு

நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் மூழ்கிய இளைஞா் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா். வலங்கைமான் ஒன்றியம், பாப்பாக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் விக்ரம் (எ) வீரமுருகன் (17). த... மேலும் பார்க்க

கங்களாஞ்சேரி ஆற்றுப்பாலம் வலுவிழப்பு: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

திருவாரூா் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றுப் பாலம் வலுவிழந்து காணப்படுவதால், வியாழக்கிழமை (ஜூலை 3) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்திரு... மேலும் பார்க்க

புதிய கண்டுபிடிப்புகள்; மாணவா்களுக்கு பாராட்டு

திருவாரூா்: திருவாரூரில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 12 மாணவ- மாணவிகள் குழுவினருக்கு திங்கள்கிழமை பரிசுத்தொகை வழங்கி, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. திரு... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் தமிழக முதல்வா் திருவாரூா் வருகை

திருவாரூா்: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூலை 9-ஆம் தேதி, திருவாரூரில் கருணாநிதி சிலையை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேர... மேலும் பார்க்க