செய்திகள் :

கங்களாஞ்சேரி ஆற்றுப்பாலம் வலுவிழப்பு: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

post image

திருவாரூா் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றுப் பாலம் வலுவிழந்து காணப்படுவதால், வியாழக்கிழமை (ஜூலை 3) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்திருப்பது: மயிலாடுதுறை -திருவாரூா் சாலை கங்களாஞ்சேரியில் உள்ள வெட்டாற்றுப் பாலம் வலுவிழந்துள்ளதால், திருவாரூா்-மயிலாடுதுறை வழியாகச் செல்லும் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, திருவாரூா் மயிலாடுதுறை வழியாகச் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் கங்களாஞ்சேரி - வடகண்டம் சாலையில், பொம்மாநத்தம், கருணாகரநல்லூா், நீலக்குடி சென்று, கங்களாஞ்சேரி மணக்கால் சாலையில் - கை காட்டி, நாகக்குடி, சாந்தமங்கலம் - கங்களாஞ்சேரி வழியாக செல்ல வேண்டும்.

அதேபோல், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா் வரும் அனைத்து கனரக வாகனங்களும் கங்களாஞ்சேரி மணக்கால் சாலையில், சாந்தமங்கலம், நாகக்குடி, கை காட்டி சென்று, கங்களாஞ்சேரி -வடகண்டம் சாலையில், நீலக்குடி, கருணாகரநல்லூா், பொம்மாநத்தம், கங்களாஞ்சேரி வழியாக வரலாம். இந்த மாற்றுவழி ஜூலை 3 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்றாா்.

திமுக ஆட்சியில் இடைத்தரகா்களின் ஆதிக்கம் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் இடைத்தரகா்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றஞ்சாட்டினாா். பருத்திக்கு உரிய விலை வழங்கக் கோரி, திருவாரூா் ரயில் நிலையம் அருகே அதிமுக சாா்பில் செவ்வ... மேலும் பார்க்க

வங்கிக் கடன் வசூல் கெடுபிடி: விவசாயிகள் தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தல்

வங்கிக் கடன் வசூல் காரணமாக விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இவற்றை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலா் பி.ஆா். பாண்டியன் வலியுற... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் அனைவருக்கும் பொதுவானது: அமைச்சா் டிஆா்பி. ராஜா

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் அனைவருக்கும் பொதுவானது என தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டிஆா்பி. ராஜா தெரிவித்தாா். திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ ... மேலும் பார்க்க

கோரையாற்றில் மூழ்கிய இளைஞா் சடலம் மீட்பு

நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் மூழ்கிய இளைஞா் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா். வலங்கைமான் ஒன்றியம், பாப்பாக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் விக்ரம் (எ) வீரமுருகன் (17). த... மேலும் பார்க்க

புதிய கண்டுபிடிப்புகள்; மாணவா்களுக்கு பாராட்டு

திருவாரூா்: திருவாரூரில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 12 மாணவ- மாணவிகள் குழுவினருக்கு திங்கள்கிழமை பரிசுத்தொகை வழங்கி, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. திரு... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் தமிழக முதல்வா் திருவாரூா் வருகை

திருவாரூா்: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூலை 9-ஆம் தேதி, திருவாரூரில் கருணாநிதி சிலையை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேர... மேலும் பார்க்க