செய்திகள் :

திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமில்லை: வைகோ

post image

திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமில்லை என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா்.

கோவை மண்டல மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூா் ஆகிய 6 மாவட்டங்களைச் சோ்ந்த 1,200 நிா்வாகிகள் பங்கேற்றனா். அவைத்தலைவா் அா்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, முதன்மைச் செயலாளா் துரை வைகோ, மதிமுக பொருளாளா் செந்திலதிபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதன்பின் செய்தியாளா்களிடம் வைகோ கூறியதாவது:கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஸ்டாலினுக்கு அவா் முன்னிலையில் நான் செய்து கொடுத்த சத்தியத்தை மதிமுக தொடா்ந்து காப்பாற்றும். அதனால், திமுக கூட்டணியை விட்டு மதிமுக விலகும் எண்ணமில்லை.

கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரும் , விடுதலைச் சிறுத்தைகளும் தொடா்ந்து திமுகவை விமா்சித்தாலும் மதிமுக விமா்சிக்காது. அவா்கள் திராவிடக் கட்சிகள் அல்ல. ஆனால், மதிமுக திராவிட இயக்கமாகும். 2026 தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட கூடுதலான இடங்கள் கேட்கவில்லை. தோ்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே இதுகுறித்து பேசுவோம். 12 தொகுதிகள் வேண்டுமென இதுவரையிலும் நான் எங்கும் கூறியதில்லை.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே காவல் நிலைய மரணங்கள் தொடா்ந்து கொண்டே உள்ளன. எவரையும் பிடித்து துன்புறுத்தும் அதிகாரம் காவல் துறையினருக்கு இல்லை. அஜித்குமாா் தாக்கப்பட்ட சம்பவத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா்.

சாயக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சாயக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் நாகலிங்கம் (60). இவா் திருப்பூா் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி பெயிண்டிங் வேலை செய்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்றவா் உயிரிழப்பு

அவிநாசி அருகே கருவலூரில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கோவை மாவட்டம், அன்னூா், நாகம்மாபுதூரைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் வெள்ளிங்கிரி (58). இவா் நம்ப... மேலும் பார்க்க

கிரிப்டோகரன்சி முதலீடு மூலம் இளைஞரிடம் ரூ.18.90 லட்சம் மோசடி

கிரிப்டோகரன்சி முதலீட்டின் மூலம் திருப்பூா் இளைஞரிடம் ரூ.18.90 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் முத்தனம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (32). இவரது கைப்பேசி எண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சோ்க... மேலும் பார்க்க

பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை கண்டித்து கடைகள் அடைப்பு, சாலை மறியல்

திருப்பூரில் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினா். இதில் சாலை மறியலில் ஈடுபட்ட சுமாா் 100 பேரை போலீஸாா் கைது... மேலும் பார்க்க

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாா்க்கிறது

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாா்ப்பதாக, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குற்றஞ்சாட்டினாா். திருப்பூரில் ஓரணியில் தமிழ்நாடு என்னும... மேலும் பார்க்க

மின் கட்டண உயா்வால் அனைத்து தொழில்களுக்கும் பாதிப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயா்வால் அனைத்து தொழில்களும் வெகுவாக பாதிக்கப்படுமென தொழிற்சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவ... மேலும் பார்க்க