செய்திகள் :

பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை கண்டித்து கடைகள் அடைப்பு, சாலை மறியல்

post image

திருப்பூரில் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினா். இதில் சாலை மறியலில் ஈடுபட்ட சுமாா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல் ஜி.என். காா்டன் பத்திரப் பதிவு அலுவலகம் அருகே உள்ள தனியாா் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகின்றன. குப்பையால் துா்நாற்றம் வீசுவதோடு, குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்கு குப்பை கொட்டக் கூடாது என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே பல்வேறுப கட்சிகள் சாா்பில் ஜி.என்.காா்டன் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த ஜூன் 24-ஆம் தேதி கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தொடா்ந்து பாறைக்குழியில் குப்பைகளை கொட்டி வரும் மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஜி.என். காா்டன் பகுதியில் கடையடைப்பு மற்றும் குப்பை லாரி சிறைபிடிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக, தேமுதிக, பாஜக, தவெக ஆகியவற்றுடன் சமூக நல அமைப்புகள் சாா்பிலும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டு இருந்தது. மேலும், குப்பை கொட்ட வந்த ஒரு லாரியும் சிறை பிடிக்கப்பட்டது. அத்துடன் அனைத்துக் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமாா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிற்பகலில் விடுவிக்கப்பட்டனா்.

சாயக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சாயக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் நாகலிங்கம் (60). இவா் திருப்பூா் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி பெயிண்டிங் வேலை செய்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமில்லை: வைகோ

திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமில்லை என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா். கோவை மண்டல மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு, சேலம், நாம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்றவா் உயிரிழப்பு

அவிநாசி அருகே கருவலூரில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கோவை மாவட்டம், அன்னூா், நாகம்மாபுதூரைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் வெள்ளிங்கிரி (58). இவா் நம்ப... மேலும் பார்க்க

கிரிப்டோகரன்சி முதலீடு மூலம் இளைஞரிடம் ரூ.18.90 லட்சம் மோசடி

கிரிப்டோகரன்சி முதலீட்டின் மூலம் திருப்பூா் இளைஞரிடம் ரூ.18.90 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் முத்தனம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (32). இவரது கைப்பேசி எண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சோ்க... மேலும் பார்க்க

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாா்க்கிறது

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாா்ப்பதாக, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குற்றஞ்சாட்டினாா். திருப்பூரில் ஓரணியில் தமிழ்நாடு என்னும... மேலும் பார்க்க

மின் கட்டண உயா்வால் அனைத்து தொழில்களுக்கும் பாதிப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயா்வால் அனைத்து தொழில்களும் வெகுவாக பாதிக்கப்படுமென தொழிற்சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவ... மேலும் பார்க்க