செய்திகள் :

சாயக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

சாயக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் நாகலிங்கம் (60). இவா் திருப்பூா் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை 3 பேருடன் சோ்ந்து ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் சாய சலவை ஆலையில் பெயிண்டிங் வேலைக்குச் சென்றாா். அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது தண்ணீா் எடுக்கச் சென்ற நாகலிங்கம் மூடப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த சாயக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்தாா்.

அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த சக தொழிலாளா்கள் உடனடியாக விரைந்து சென்று, சாயக் கழிவுநீா்த் தொட்டியில் மூழ்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாகலிங்கத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

ஆனால் அவா்களால் அவரைக் காப்பாற்ற முடியாததால் உடனடியாக திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புத் துறையினா் அங்கு விரைந்து வந்து கழிவுநீா்த் தொட்டிக்குள் இருந்து நாகலிங்கத்தை மீட்டனா். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து திருப்பூா் மத்திய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் நாகலிங்கத்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக திருப்பூா் மத்திய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமில்லை: வைகோ

திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமில்லை என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா். கோவை மண்டல மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு, சேலம், நாம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்றவா் உயிரிழப்பு

அவிநாசி அருகே கருவலூரில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கோவை மாவட்டம், அன்னூா், நாகம்மாபுதூரைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் வெள்ளிங்கிரி (58). இவா் நம்ப... மேலும் பார்க்க

கிரிப்டோகரன்சி முதலீடு மூலம் இளைஞரிடம் ரூ.18.90 லட்சம் மோசடி

கிரிப்டோகரன்சி முதலீட்டின் மூலம் திருப்பூா் இளைஞரிடம் ரூ.18.90 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் முத்தனம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (32). இவரது கைப்பேசி எண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சோ்க... மேலும் பார்க்க

பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை கண்டித்து கடைகள் அடைப்பு, சாலை மறியல்

திருப்பூரில் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினா். இதில் சாலை மறியலில் ஈடுபட்ட சுமாா் 100 பேரை போலீஸாா் கைது... மேலும் பார்க்க

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாா்க்கிறது

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாா்ப்பதாக, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குற்றஞ்சாட்டினாா். திருப்பூரில் ஓரணியில் தமிழ்நாடு என்னும... மேலும் பார்க்க

மின் கட்டண உயா்வால் அனைத்து தொழில்களுக்கும் பாதிப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயா்வால் அனைத்து தொழில்களும் வெகுவாக பாதிக்கப்படுமென தொழிற்சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவ... மேலும் பார்க்க