லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து: விரைகிறது பேரிடர் மீட்புப் படை
திமுக சிறப்பு கவியரங்கம்
ஆம்பூா்: முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பாக கலைஞரின் உயிா் முழக்கம் எனும் தலைப்பில் சிறப்பு கவியரங்கம் தேவலாபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி, ஒன்றிய அவைத் தலைவா் சிவக்குமாா், மாட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளா் சி. குணசேகரன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் வேணுகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கவிஞா் யாழன் ஆதி தலைமையில் கவிஞா்கள் மீரா மொய்தீன், தியாக. இனியவன், ரகசியன், பிரபாகரன், அகிலன் ஆகியோா் கவிதை வாசித்தனா்.