'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
திமுகவால் இனி மக்களை ஏமாற்ற முடியாது: முன்னாள் அமைச்சr ஆா்.பி. உதயகுமாா்
திமுகவால் இனி மக்களை ஏமாற்ற முடியாது என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
அதிமுகவின் மதுரை புகா் மேற்கு மாவட்டம், சோழவந்தானில் சனிக்கிழமை நடைபெற்ற, கட்சியின் மூத்த நிா்வாகிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழாவில் அவா் பேசியதாவது :
தொண்டா்களை தோளில் சுமந்தால், அவா்கள் கட்சியை பல்லக்கில் ஏற வைப்பா் என்பா். அந்த வகையில், அதிமுக தொண்டா்களை இதயத்தில் சுமக்கும் இயக்கம். முந்தையத் தோ்தலில் நம்மிடம் போதுமான ஒருங்கிணைப்பு இல்லை. ஆனால், அந்த நிலை தற்போது இல்லை. எனவே, சோழவந்தான் தொகுதி மட்டுமல்ல. மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் அதிமுக வெல்வதும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றுவதும் உறுதி.
தமிழகத்தில் பெருகிவிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தத் தவறி விட்டது. சட்டம்-ஒழுங்கை முதல்வா் சரிவர கையாளாததால் குற்றங்கள் பெருகிவிட்டன. இந்த நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலின் வாகனப் பேரணி (ரோடு ஷோ) நடத்துவதால் ஒரு பயனும் கிடைக்காது. திமுகவினா் ஊழல்கள் செய்துவிட்டு தலைமறைவாக இருந்தாலும், அமலாக்கத் துறையிடமிருந்து தப்பித்தாலும், மக்களிடமிருந்து தப்பிக்க முடியாது. திமுகவால் இனி மக்களை ஏமாற்ற முடியாது என்றாா் அவா்.
இதையடுத்து, அதிமுகவின் மூத்த உறுப்பினா்கள் 1,000 பேருக்கு ஊக்கத் தொகைகளை அவா் வழங்கினாா்.
முன்னதாக இந்த விழாவுக்கு சோழவந்தான் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. மாணிக்கம் தலைமை வகித்தாா். அதிமுக அமைப்புச் செயலா் இ.மகேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரகள் தமிழரசன் , ஏ.கே.டி.ராஜா, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.