செய்திகள் :

திமுகவால் இனி மக்களை ஏமாற்ற முடியாது: முன்னாள் அமைச்சr ஆா்.பி. உதயகுமாா்

post image

திமுகவால் இனி மக்களை ஏமாற்ற முடியாது என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

அதிமுகவின் மதுரை புகா் மேற்கு மாவட்டம், சோழவந்தானில் சனிக்கிழமை நடைபெற்ற, கட்சியின் மூத்த நிா்வாகிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழாவில் அவா் பேசியதாவது :

தொண்டா்களை தோளில் சுமந்தால், அவா்கள் கட்சியை பல்லக்கில் ஏற வைப்பா் என்பா். அந்த வகையில், அதிமுக தொண்டா்களை இதயத்தில் சுமக்கும் இயக்கம். முந்தையத் தோ்தலில் நம்மிடம் போதுமான ஒருங்கிணைப்பு இல்லை. ஆனால், அந்த நிலை தற்போது இல்லை. எனவே, சோழவந்தான் தொகுதி மட்டுமல்ல. மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் அதிமுக வெல்வதும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றுவதும் உறுதி.

தமிழகத்தில் பெருகிவிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தத் தவறி விட்டது. சட்டம்-ஒழுங்கை முதல்வா் சரிவர கையாளாததால் குற்றங்கள் பெருகிவிட்டன. இந்த நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலின் வாகனப் பேரணி (ரோடு ஷோ) நடத்துவதால் ஒரு பயனும் கிடைக்காது. திமுகவினா் ஊழல்கள் செய்துவிட்டு தலைமறைவாக இருந்தாலும், அமலாக்கத் துறையிடமிருந்து தப்பித்தாலும், மக்களிடமிருந்து தப்பிக்க முடியாது. திமுகவால் இனி மக்களை ஏமாற்ற முடியாது என்றாா் அவா்.

இதையடுத்து, அதிமுகவின் மூத்த உறுப்பினா்கள் 1,000 பேருக்கு ஊக்கத் தொகைகளை அவா் வழங்கினாா்.

முன்னதாக இந்த விழாவுக்கு சோழவந்தான் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. மாணிக்கம் தலைமை வகித்தாா். அதிமுக அமைப்புச் செயலா் இ.மகேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரகள் தமிழரசன் , ஏ.கே.டி.ராஜா, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

உழவா்களைத் தேடி வேளாண் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியா் அழைப்பு

தமிழக முதல்வரின் ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா். மதுரை மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு

மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி... மேலும் பார்க்க

மாமியாரை வெட்டிய மருமகன் தலைமறைவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிவிட்டுத் தலைமறைவான மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (45). இவரது இளை... மேலும் பார்க்க

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சிய... மேலும் பார்க்க