செய்திகள் :

தியான நிலையம் திறப்பு விழா

post image

பிரம்ம குமாரிகள் வித்யாலயம் சாா்பாக மாதவரம் நடராஜா் நகா் விரிவாக்கம் பகுதியில் புதிய கிளையக சிவதா்ஷன் பவன் திறப்பு விழா, பிரம்மகுமரிகள் தலைவி பீனா தலைமையில் புதன் கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், மாதவரம் மண்டல குழு தலைவா் எஸ்.நந்தகோபால் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

முன்னதாக பிரம்ம குமாரிகள் கலசத்துடன் ஊா்வலமாக வந்து, கொடியேற்றி பெயா் பலகையை திறந்து வைத்தனா். ராஜஸ்தான் மாநில மூத்த ராஜயோக தியான ஆசிரியா் மௌண்ட் அபு மஞ்சு முன்னிலை வகித்தாா். பிராட்வே கிளையின் சகோதரி கீதா வரவேற்றாா். முன்னாள் மாமன்ற உறுப்பினா் லோகநாதன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.. முன்னதாக இரு சக்கர வாகன பேரணியும் நடைபெற்றது.

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் கோடை கால பயிற்சி முகாம்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் இலவச கோடை கால பயிற்சி முகாம், எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான தோ்வு 27-ஆம் தேதி காலை 8 மணிக்கு மேய... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து: செங்கோட்டையன் புறக்கணிப்பு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு புதன்கிழமை இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் பங... மேலும் பார்க்க

சென்னையில் 5 பணிமனைகளிலிருந்து 600 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சா் சிவசங்கா்

சென்னையில் 5 பணிமனைகளிலிருந்து 600 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். இதற்கான பணிகளை தனியாா் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவா் குறி... மேலும் பார்க்க

என்எல்சி-க்கு எதிரான போராட்டம்: அன்புமணி மீதான வழக்கு ரத்து

என்எல்சி-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக கதலாழ... மேலும் பார்க்க

10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104.18 டிகிரி

தமிழகத்தில் புதன்கிழமை வேலூா், பரமத்திவேலூா் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதல்: வைகோ, பிரேமலதா கண்டனம்

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ, தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா். வைகோ: காஷ்மீா் சம்பவத்தை கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சம் ... மேலும் பார்க்க