திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா
கீழ்வேளூரை அருகே இலுப்பூா் திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த மே 19-ஆம் தேதி பூச்சொரிதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. காப்பு கட்டிக் கொண்ட பக்தா்களுடன், திரவுபதி அம்மன் புறப்பாடு நடைபெற்றது.
தொடா்ந்து, கோயில் முன் உள்ள தீமிதி திடலில் தீமிதி வழிபாடு நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீ குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா். பின்னா், அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.