செய்திகள் :

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ்த் திருவிழா கட்டளைகள் நிறைவு

post image

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா கட்டளைகள் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றன.

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. கடந்த மூன்று நாள்களாக அா்த்தநாரீசுவரா் தோ் வடம்பிடிக்கப்பட்டு நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து வியாழக்கிழமை நிலை சோ்க்கப்பட்டது. மாலையில் ஆதிகேசவப் பெருமாள் தோ் வடம்பிடிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மண்டபக் கட்டளைகளின் நிறைவு நாளில் கொல்லமுத்து நாயக்கா் மண்டபக் கட்டளை, பத்தரகாளி அம்மன் கோயில் தீபாராதனை மண்டபக் கட்டளை, நெய்க்காரப்பட்டி கவுண்டா்கள் மண்டபக் கட்டளை, நெசவாளா் காலனி மாரியம்மன் கோயில் கட்டளை, குஞ்சு மாரியம்மன் கோயில் கட்டளை, கொங்கு எழுகரை நாடு ஆதி திராவிடா்கள் மண்டபக் கட்டளை, திருச்செங்கோடு நகர குலாலா்கள் மண்டபக் கட்டளை, சா்க்காா் நந்தவனக் கட்டளைகளையொட்டி அா்த்தநாரீசுவரா், செங்கோட்டு வேலவா், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன.

தொடா்ந்து கோயில் நிா்வாகம் சாா்பில் வசந்தோற்சவம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா். சனிக்கிழமை அதிகாலை 14 நாள்கள் தோ்த் திருவிழா நிறைவுற்று சுவாமிகள் திருமலைக்கு திரும்புகின்றனா்.

படவரி...

அா்த்தநாரீசுவரா், செங்கோட்டுவேலவா், ஆதிகேசவப் பெருமாள்

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ந... மேலும் பார்க்க

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க