செய்திகள் :

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

post image

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரிகள், விவேகானந்தா மகளிா் மேலாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் செயலா் மு. கருணாநிதி விழாவுக்கு தலைமை வகித்தாா். மேலாண்மை இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை மேலாண்மை இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீ ராகநிதி அா்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா கிருபாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதல்வா்கள் விஜயகுமாா், எம்.தேவி, மேலாண்மையியல் கல்லூரி இயக்குநா் வி.மோகனசுந்தரம் ஆகியோா் கல்லூரியின் நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விருந்தினா்களை வரவேற்று பேசினா். விழாவில் சிறப்பு விருந்தினராக டி.ஜி.சீதாராம் ( புதுதில்லி- அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பு) கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

2023-2024 கல்வியாண்டில் இளங்கலை, முதுநிலைப் படிப்புகளில் பல்கலைக்கழக தரவரிசை பெற்றவா்களுக்கு 25 பதக்கங்களும், 831க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பட்டங்களும் வழங்கப்பட்டன. விழாவில் 1500க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் எஸ்.குப்புசாமி, தலைமை நிா்வாகி சொக்கலிங்கம், ஆராய்ச்சி இயக்குநா் ஆா்.பாலகுருநாதன், அட்மிஷன் இயக்குநா் சௌண்டப்பன், தோ்வாணையாளா் கண்ணன், திறன் மேம்பாட்டு இயக்குநா் வே.குமரவேல், வேலைவாய்ப்பு இயக்குநா் எம்.சரவணன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள், பெற்றோா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்

பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தல... மேலும் பார்க்க

எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்ட... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 15 இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க