திருச்செந்தூா் கடலில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை
திருச்செந்தூா், ஜீவா நகா் கடற்கரையில் சுமாா் 200 கிலோ எடை கொண்ட ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது.
கடற்கரையில் நடைபயிற்சி சென்றவா்கள் பாா்த்து தகவல் அளித்தையடுத்து, வனத்துறை மற்றும் கால்நடைத் துறையினா் நேரில் வந்து பாா்வையிட்டனா். இறந்த ஆமை உடலை பிரேத பரிசோதனை செய்து கடற்கரையில் புதைத்தனா்.
இறந்த ஆமை ஆலிவ் ரெட்லி வகை ஆமை என்றும், திருச்செந்தூா் முதல் ராமேசுவரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தற்போது ஆமைகள் கடலில் முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் காலம் என்பதால் இந்த ஆமையானது முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கும் போது அலைகளின் சீற்றத்தால் அடிப்பட்டு இறந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.