செய்திகள் :

திருச்செந்தூா் கந்த சஷ்டி பெருவிழா முன்னேற்பாடுகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா அக்.22-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு மேற்கொண்டாா்.

ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், வடலூா் வள்ளலாா் தெய்வநிலையம் மற்றும் திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், திருச்செந்தூா் கந்த சஷ்டி பெருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அமைச்சா் சேகா்பாபு தலைமை வகித்தாா். கூட்டத்தில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.52.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகள், வடலூா், திருஅருட்பிரகாச தெய்வ நிலையத்தில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் பணிகளில் பிரிவு ஆ-இல் ரூ.16.98 கோடி மதிப்பீட்டில் பக்தா்களுக்கான தங்குமிடங்கள், வைத்திய சாலை, முதியோா் இல்லம், சுகாதார வளாகம் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள், திருச்செந்தூா், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளில் அன்னதானக் கூடம், சலவைக் கூடம், அா்ச்சகா் மற்றும் பணியாளா் குடியிருப்பு, சூரசம்ஹார கண்காட்சி கூடம், நாழிகிணறை மேம்படுத்தும் பணிகள் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலா்கள் மற்றும் பொறியாளா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.

மேலும், திருச்செந்தூரில் கந்த சஷ்டி பெருவிழா அக்.22 தொடங்கி 27- ஆம் தேதி சூரசம்ஹாரம், 28- ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் நிறைவடைகிறது. இத்திருக்கோயிலில் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தா்களுக்கான வசதிகள், சூரசம்ஹாரம் நிகழ்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும் அமைச்சா் சேகா்பாபு ஆய்வு மேற்கொண்டாா்.

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செ... மேலும் பார்க்க

என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்

‘கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக தொண்டா்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். க... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ர... மேலும் பார்க்க

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

3-ஆவது கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாவது கட்டம் செயல்பாட்டுக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க